Skip to main content

Posts

Showing posts from March, 2019

ஒன்றையும் அறிய முடியாது

மார்டின் பட்லர் ( போர்ச்சுகீசிய நாட்டில் வசிக்கும் மார்டின் பட்லர், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மெய்ஞானியான குர்ட்ஜிப் அவர்களின் நேரடி மாணவியான ரீனா ஹேண்ட்சின் உதவியுடன் ஆன்மப் பயிற்சிகளில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர். மனித நிலைமைகள் பற்றிய ஆழமான புரிதலுக்கு இவர் வருவதற்கு ஸ்பினோஷா போன்ற தத்துவவாதிகளையும் முறையாகக் கற்றிருக்கிறார். martinbutler.eu   என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து இட்டுவருகிறார். என் காலத்தையும் என்னைச் சுற்றியுள்ள நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சூழ்நிலைகளுக்குள் எனது விழைவுகள், ஆசைகள், வலிகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதற்கும், எனக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களினூடாக நிறைவாகவும் நீதியாகவும் இருப்பதற்கும் மார்டின் பட்லரின் எழுத்துகள் உதவிகரமாக இருக்கின்றன. அவரது எழுத்துகள் உரிமைத்துறப்பை அறிவித்திருப்பதால் எனக்குப் பிடித்தவற்றை இங்கே மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். இங்கே தொடர்ந்து அது வெளியாகும். தன்னில் மட்டுமே வேலை சாத்தியம் என்று நம்புபவர்கள் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாம். மார்டின் பட்லர் என்னிடம் ஏற்படுத்தி

இகம் பரம் வேண்டும் உடல்

தான் எழுதிய படைப்புகள் காரணமாக சீன அரசால் வேட்டையாடப்பட்டு தற்போது லண்டனில் வசிக்கும் 65 வயது எழுத்தாளர் மா ஜியானின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஓவியக் கலைஞருமான மா ஜியானின் ஓவியங்கள், 1983-ம் ஆண்டில் ‘ஆன்மிக மாசுபாடு’-ஐ ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டு கிழித்தெறியப்பட்டு அழிக்கப்பட்டதோடு சீன அரசால் கைதும் செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது தனிப்பட்ட வாழ்விலும் புயல் வீசியது. விவாகரத்து பெற்ற அவரது மனைவி, மா ஜியானை தமது மகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. கலைஞனாகவும் தனிப்பட்ட வகையிலும் நேர்ந்த துயரங்களாலும் தன் எதிர்காலம் குறித்த கேள்விகளாலும் துளைக்கப்பட்டு பதில் தேடி மூன்றாண்டுகள் சீனா முழுவதும் கால்நடைப் பயணத்தை மேற்கொண்டார். பௌத்த சமயத்தைத் தழுவினார். திபெத்திலும் சிறிது காலம் வசித்தார். தனது திபெத்திய அனுபவங்களையொட்டி ஆங்கிலத்தில் எழுதிய கதைகளின் சிறிய தொகுப்பே ‘நாக்கை நீட்டு’. உலகின் கூரை என்று சொல்வதற்குத் தகுந்த உயரத்தில் காற்றழுத்தம் குறைந்து, கடினமான தட்பவெப்பச் சூழ்நிலைகளுக்குள் அகமும் புறமுமாக அதீதச் சூழலுக்குள் அலையும் மனி

ஜலாலுதீன் ரூமியின் விருந்தினர் இல்லம்

இந்த மனித இருப்பு ஒரு விருந்தினர் இல்லமாகும். வரும் ஒவ்வொரு காலைப்பொழுதும் ஒரு புதிய வருகை ஒரு மகிழ்ச்சி, ஒரு மன அழுத்தம், ஒரு அல்பத்தனம் ஒரு கணநேர விழிப்பு நிலை எதிர்பாராமல் வருபவரைப் போல. அவர்கள் எல்லாரையும் வரவேற்று மகிழ்வியுங்கள்! அறைகலன்களேயற்ற உங்களது காலிவீட்டுக்குள் தாறுமாறாக வந்த துயரங்களின் கூட்டமாக இருப்பினும் ஒவ்வொரு விருந்தினரையும் மரியாதையுடன் நடத்துங்கள். அந்த விருந்தினர் உங்களை இங்கிருந்து இன்னொரு புதிய சந்தோஷத்துக்கு விரட்டுபவராகக் கூட இருக்கலாம். இருண்ட எண்ணங்கள், அவமானம், வன்மம் எவராக இருந்தாலும் புன்னகையுடன் வாயிலில் நின்று உள்ளே வருவதற்கு அழையுங்கள். வருபவர் யாராகவும் இருக்கட்டும் நன்றியோடு இருங்கள் ஏனெனில் ஒவ்வொருவரும் அப்பாலில் இருந்து ஒரு வழிகாட்டியாக அனுப்பப்பட்டவர்கள்.

இது துயரம்தான் பழனிவேள்

காலையில் கவின்மலரிடம் தொலைபேசிய போது தான் நண்பர்களால் நரேந்திரன் என்று அழைக்கப்படும் பழனிவேளின் மரணச் செய்தியைத் தெரிந்து கொண்டேன். பழனிவேளைத் தெரியுமா என்ற தொனியிலேயே விஷயம் உணரப்பட்டுவிட்டது. வே. பாபு மரணச் செய்தியும் அப்படித்தான் வந்தது- ஏற்கனவே தெரிந்தது உறுதிப்படுத்தப்படுவது போல. பழனிவேள் உடல்நலமில்லாமல் இருப்பது பற்றி கண்டராதித்தன் சில மாதங்களுக்கு முன்னர் என்னிடம் சொல்லியிருந்ததை மனம் கோத்திருக்க வேண்டும். இது துரதிர்ஷ்டமானது தான். பகலிரவுப் பொழுதுகளை, சில போதைப் பொழுதுகளை, படைப்பூக்கமிக்க தருணங்களைப் பகிர்ந்த நம் வயதையொத்தவர்கள் இல்லாமல் போவது. பழனிவேளை நண்பர் என்று சொல்லமுடியாது. 90-களின் இறுதியில் 2000-ம் ஆண்டின் துவக்கத்தில் புதுக்கவிதையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை மாற்றிய, கவிதை வடிவத்தை வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான லட்சியப்பூர்வமான கருவியாகப் பாவித்த இளம் நவீன கவிஞர்களின் இயக்கம் ஒன்று செயல்பட்டது. திருநெல்வேலி, நாகர்கோவில்,  திருவண்ணாமலை, சென்னை, திண்டுக்கல் என வேறு வேறு இடங்கள் சார்ந்து அவர்கள் இயங்கினார்கள். எல்லாரும் சேர்ந்து கூடி பேசிக் கொண்டனர் என்றெல்லாம் ச