Skip to main content

Posts

Showing posts from January, 2017

எனது ஸ்ரீ - ராம் கோபால் வர்மா

 தமிழில்: ஷங்கர்   விஜயவாடாவில் நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, ஸ்ரீதேவி நடித்த புதிய படம் வெளியாகும் போதெல்லாம் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும்போது திரையரங்கின் வெளியே உள்ள விளம்பரத்தட்டிகளில் அவரது படத்தை அண்ணாந்து ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன். அவரது அழகும் கவர்ச்சியும் மிக வலிமையானது. அவரிடம் இருந்த நடிகையை பார்வையாளர்களும் திரையுலகமும் தெரிந்து கண்டு உணர்வதற்கு நிறைய நிறைய வருடங்களும் படங்களும் தேவைப்பட்டன. என்னைப் பொறுத்தவரையில் அவரிடம் உள்ள நடிகையை மிகச்சரியான முறையில் மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் மூலம் சேகர் கபூர் தான் வெளிப்படுத்தினார். அவர் ஆரம்பகாலங்களில் நடித்த படங்களிலேயே அவரது நடிப்புத்திறன் நன்கு வெளிப்பட்டிருக்கும். மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் புதிய ஸ்ரீதேவியை அடையாளம் கண்டனர். சேகர் கபூரின் அழகியல், அவரது அபாரமான அழகு மற்றும் நம்பமுடியாத நடிப்புத்திறன் இரண்டையுமே வெளிக்கொண்டு வந்தது. நான் எனது முதல்படமான சிவா(உதயம்) திரைப்படத்துக்கான வேலையில் இருந்தபோது ஸ்ரீதேவியுடனான எனது பயணம் தொடங்கி

நீ புலிதான் நீ புலிதான்

ஷங்கர்ராமசுப்ரமணியன் எத்தனை லட்சம் வருஷங்கள் ஆகிவிட்டன இன்னும் என் வீட்டின் இரும்பு கேட்டிற்குள் நுழையும் போது பூனை தயங்கி நின்று காதை வாலை உயர்த்தி மௌனமாய் சுற்றுமுற்றும் நோட்டமிடுகிறது கம்பிகளுக்குள் மெல்ல அடியெடுத்து வைக்கிறது இதயத்திலும் ரோமத்திலும் புதிதாகப் பிறந்த விழிப்பு என் வீடு என் தெரு என் தோட்டம் என்று சொல்லப்படும் உன் காட்டில் உன் உடலை நீட்டு நீ புலிதான் நீ புலிதான் என்று இரைச்சலிடுகிறது எனது விழிப்பு.

(ஏ.ஆர். ரஹ்மான்-50) விடுதலையென்றால் எல்லா விடுதலையும்தான்

ஷங்கர்ராமசுப்ரமணியன் திருநெல்வேலிக்குப் போகும்போதும், தமிழகத்தின் சிற்றூர்களில் பயணம் செய்ய வாய்க்கும்போதும் பேருந்துகளில் ஒலிக்கும் பாடல்களை ரொம்ப காலமாகவே கவனித்துவருகிறேன். பெருங்களத்தூர் தாண்டியவுடன் தேநீரின் ருசி மாறுவதைப் போலவே இளையராஜாவுக்குள் உருமாறிவிடுகிறது தமிழகம். இளையராஜாவைத் தவிர்த்து தேவா தொடங்கி இன்றைய இமான், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த பாடல்களும் ஒலிக்கப்படுகின்றன என்றாலும் இளையராஜா காலத்திய உணர்வு மதிப்பீடுகளையே கொண்டிருக்கும் இசையே கேட்கப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் கிராமங்கள் வரை பரவிவிட்ட காலத்திலும் எண்பதுகள் காலகட்ட மதிப்பீடுகளைப் பிரதிபலிக்கும் காதல், காத்திருப்பு, ஏக்கம், தாபம், காதல் தோல்வி அளிக்கும் புலம்பல் மற்றும் சல்லாபப் பாடல்கள்தான் இன்றும் பேருந்துகளில் காலையிலும் மாலையிலும் ரசிக்கப்படுகின்றன. கிராமிய, வேளாண் கலாசாரப் பெருமிதங்கள், மண்ணின் பெருமை, தாய்மையின் மீதான புனிதம் ஆகியவை மதிய வேளைப் பயணங்களை நிறைக்கின்றன. இந்தியாவில் வேகமாக நகர்மயமாகிவிட்ட மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில், உலகமயமாதலின் அத்தனை சாதகங்களையும் சுகித்துவரும் ஒரு நிலத்தின் சிறுநகரங