Skip to main content

Posts

Showing posts from November, 2018

அசீஸ் நந்தியுடன் ஒரு உரையாடல்

ஈரானைச் சேர்ந்த தத்துவ ஆசிரியர் ராமின் ஜகன்பெக்லூவுடன் அசீஸ் நந்தி நடத்திய உரையாடல் நூலான Talking India-வின் சுருக்கமாக இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அசீஸ் நந்தி 1937 இல் பிறந்தவர். சமூகவியல் படித்து உளவியல் மருத்துவராகப் பயிற்சிபெற்றவர். அரசியல் உளவியலாளர் என்று தன்னைப் பற்றி அவர் கூறுகிறார். மனித இயல்பிலும் , பொதுவாழ்க்கை தொடர்பாகவும் தனக்கு இருக்கும் ஆழ்ந்த விருப்பை அரசியல் உளவியலாளர் என்ற பெயரே நியாயம் செய்வதாக கருதுகிறார்.நவீனத்துவத்துக்குப் பின்பான காலகட்டத்தில் காந்தியை மறுநிர்மாணம் செய்தவர்களில் மிகவும் முக்கியமானவர் அசீஸ் நந்தி.  வெவ்வேறு அறிவுமுறைகள் மற்றும் கலாச்சாரத் தரப்புகள் வெறுப்போ , விலக்கமோ இல்லாமல் உரையாடுவதை தொடர்ந்து வலியுறுத்துகிறார் அசீஸ் நந்தி. இன்று வெவ்வேறு அடையாளத் தரப்புகளும் , அதன் அரசியல் தர்க்கங்களும் பரஸ்பரம் மூர்க்கமாக மறுப்பதும் , விலக்குவதாகவும் , வெறுப்பதாகவும்  மாறியுள்ள தமிழ் சூழலில் அசீஸ் நந்தியின் உரையாடல் தன்மையை நாம் பரிசீலிப்பது அவசியமானது. வெகுமக்களின் வாழ்க்கைமுறை , விழுமியங்கள் மற்றும் நம்பிக்கைகள் மேல் கொண்டுள்ள ' உண்மையான

அண்டை வீட்டு நெசவாளி டி.ஆர். நாகராஜ்

 ஷங்கர்ராமசுப்ரமணியன் காந்தியையும் அம்பேத்கரையும் எதிர்நிலைகளாகப் பாவித்து இந்தியாவில் தொடங்கப்பட்ட தலித் இயக்கத்தின் போக்கை உலகமயமாக்கல் திட்டங்கள் தொடங்கியதன் பின்னணியில் டி.ஆர். நாகராஜ், தீப்பற்றிய பாதங்கள் புத்தகத்தில் பேசுகிறார். வளர்ச்சி அரசியல் என்ற தர்க்கத்தை இந்திய நடுத்தர வர்க்கத்தினரும் அரசுகளும் வேகமாக முன்னெடுத்த சூழ்நிலையில் தலித் மக்களுக்கும் , தலித் மக்களை அங்ககமாகக் கொண்டிருக்கும் கிராமிய சமூகப் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் நெருக்கடிகளையும் அபாயங்களாக முன் உணர்கிறார். சாதியப் படிநிலையையே ஆதாரமாக கொண்ட இந்தியக் கிராமத்தை தீண்டாமையின் தொட்டில் என்று கூறி அம்பேத்கர் வெறுத்து ஒதுக்குகிறார். அம்பேத்கர் இத்தீர்மானத்துக்கு வருவதற்கான நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் டி.ஆர்.நாகராஜ் , உலகமயமாக்கல் மற்றும் மேம்பாட்டுத் தொழில்நுட்பங்கள் காரணமாக கிராமியப் பொருளாதாரத்திற்கு ஏற்படும் சீர்குலைவு தலித் மக்களின் வாழ்வாதாரத்தைத்தான் முதலில் பாதிக்கும் என்கிறார். இந்தப் புள்ளியில்தான் காந்தியை நோக்கி அவரது சுயராஜ்ஜிய கருத்துகளில் அம்பேத்கரின் இடைவெளிகளை நிரப்பும் சாத்தியத்தை நோக்கி நகர்