Skip to main content

Posts

Showing posts from December, 2022

கொஞ்சம் நக்கித் தின்னக் கிடைத்தால் போதும் அன்றே முடிகிறது இந்தியப் புரட்சி

வேதாகமம் தொடங்கி ஆட்டோவின் முதுகு வரை நுண்மொழிகளும் பொன்மொழிகளும் நமக்கு இன்றைக்கும் அன்றாடத் தேவையாகவே உள்ளது. க்ஷணப் பொழுது உண்மைகள், நித்திய உண்மைகள், அவரவர் தொடர்புடைய, அவரவரின் அவ்வப்போதுடன் தொடர்புடைய அனுபவத்தைச் சார்ந்த உண்மைகளைப் பிரதிபலிப்பதாக இந்த நுண்மொழிகள் இயங்குகின்றன. ‘சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும். கர்த்தரைத் தேடுகிறவருகளுககோ ஒரு நன்மையும் குறைவுபடாது.’ பாளையங்கோட்டைக்குள் நுழையும்போது, தேவாலயச் சுவரில் பேருந்து கடக்கும்போதெல்லாம், சிறுவயதில் என் மீது தாக்கம் செலுத்திய இந்த வரிகள் இப்போது ஒன்றும் செய்யாது. அப்படியா என்று கேட்டுவிட்டுக் கடந்துவிடுவேன். எனது கருத்துலகம், படைப்புலகத்தை வடிவமைத்த ஆசிரியர்களில் ஒருவரான காஃப்காவின் நுண்மொழிகள் புத்தகத்தை வாசித்து முடித்தபோது, பல நுண்மொழிகள் அந்தரங்கத் தன்மை கொண்டவை. எனக்கு அவை எதையும் தொடர்புறுத்தவில்லை. ஆனால், காஃப்காவின் உலகில் உள்ள வஸ்துகள், தொடர்ந்து அவரைப் பாதிக்கும் விஷயங்கள் உண்டு. காகம் தென்படுகிறது.  காஃப்காவின் வாழ்க்கையிலேயே அமைதியும் மகிழ்ச்சியும் நிலவிய காலத்தில் எழுதப்பட்டது என

அநித்யச் சிவப்பு

    செம்மை ஏறியிருந்த அந்தச் சாயங்காலம் விரைவாக அந்திக்கருமை நோக்கி சைதாப்பேட்டை பாலத்தில் விசுக்கென போய்க்கொண்டிருந்தது அதன் செம்மையால் கூடுதல் சிவப்பாகியிருந்த இரண்டு செவலை நாய்கள் பாலத்தின் பக்கவாட்டு நடைபாதையில் அவற்றின் ஓட்டத்திலேயே சாயங்காலத்தைச் சந்தித்தன சிகப்புச் சேலை அணிந்து மார்க்கெட்டிலிருந்து திரும்பி எங்கள் முன்னால் போகும் நடுவயதுக்காரிதான் எங்கள் எஜமானி என்று சாயங்காலத்திடம் அறிமுகப்படுத்திக் கொண்டன அந்தியே நீ இப்போது சிவப்பு கிழக்கும் மேற்குமாக எதன்பொருட்டும் இல்லாமல் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும்  நாய்கள் சிவப்பு அவை தமது எஜமானி என்று கருதும் அவளும் சிவப்பு.

சி. மோகன் 70 - அதல பாதாளத்தில் வீழ்தலின் வசீகரம்

    ரெய்னர் மரியா ரில்கேயின் தி டூயினோ எலிஜீஸ் காவியத்தின் ஏழாம் பகுதியில் இருந்து சி.   மோகனுக்கான இந்தக் கட்டுரையைத் தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.   உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு மணித்துளி உள்ளது அது ஒருமணித்துளியாகக் கூட இல்லாமல் இருக்கலாம், காலத்தின் விதிகளால் அளக்கப்படாத ஒருவெளி அது இரண்டு தருணங்களுக்கு இடைப்பட்டது- அங்கேதான் நீ இருந்தாய். முழுமையாக. இருப்பால் நிறைந்திருக்கிறது ரத்தநாளங்கள்.   சி. மோகனின் உலகநோக்கு, இலக்கியப் பார்வை, விமர்சனங்கள், படைப்புகளுடன் ஓரளவு நெருங்கிய பரிச்சயமுள்ளவன் என்ற வகையில் அவரது ஒட்டுமொத்த ஆளுமையையும் அதலபாதாளத்தில் வீழ்தலின் வசீகரத்தால் தாக்கமுற்றது என்று வரையறுக்க முயல்கிறேன். அவரைச் சிறுவயதில் பாதித்த இலக்கிய ஆளுமையான ஜிநாகராஜன், பின்னர் தாக்கமுற்று நாவலாக எழுதிப் பார்த்த ஓவிய மேதை ராமானுஜம் ஆகியோரைப் பரிசீலிக்கும்போது, அவர்களது கலைப்படைப்புகள் மட்டுமின்றி பின்விளைவுகளோ பலன்களோ கருதாத அவர்களது சாகசமும், பித்தும் சி. மோகனைப் பெரிதாக ஈர்த்துள்ளது.   சி. மோகன் தனக்காகத் தேர்ந்து கொண்ட வாழ்க்கையிலும் நாகராஜன் போன்ற கலைஞர்களின் ச