Skip to main content
ஷங்கர்ராமசுப்ரமணியன்
ஞானிகள் என் இதயத்திடம் கிசுகிசுக்கின்றனர்
பிரபஞ்சம் எனக்காகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறது
சென்ற கோடைக் காலத்தைதுயரத்தில் தொலைத்துவிட்டேன்
இந்தக் கோடைக்காலம்
அவிந்த இலைகளின் வீச்சமாக
மெல் ஈரக்காற்றாக
பளிச்சென்று உதிர்த்து நிற்கும் மரங்களாக
நினைவுகளின் கனமின்றி
என் புலன்களை நிரப்பிப் புதுப்பிக்கிறது
தேவதச்சனுக்குக் கோவில்பட்டியில்
கோடையை உரைக்கும் முதல் குயில்
பெருங்குடி ரயில் நிலையத்தில்
மனமொழிந்த ஒரு நொடித் துளைக்குள்
என்னிடம் பாடியது
ஹம்சா பரமஹம்சா
Comments