Skip to main content

அந்த மனிதர்கள்



ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஏன் அவர்கள்
ரயிலடிகளில்
பொதுக்கழிப்பறைகளில்
நடைபாதைகளில்
சாலைகளில் சுவர் மூலைகளில்
புகையிலை எச்சிலைத்
துப்பித் துப்பி
இந்த அழகிய மாநகரத்தை
அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்

உங்கள் ஆசுவாசமான பயணத்தின்
நடுவில்
சிக்னல் முனையில்
காத்திருக்கும் போது
ஏன்
அவர்களின் குழந்தைகள்
கிடைக்கும் சிறு அவகாசத்தில்
அல்பப் பொருட்களின் பயன்பாட்டை
உங்களுக்குக் காட்டி
விற்று
யாசகம் கேட்டு
உங்கள் மென்மையான மனதைப் பிசைந்தெடுக்கிறார்கள்

அவர்கள் ஏன்
சாலையோரத்தில் உறங்கும்போது
காவல் நிலையத்தில்
மோதல்சாவுகளில்
செத்துத் தொலைக்கிறார்கள்

Comments