Skip to main content

Posts

Showing posts from January, 2025

பாலசுப்ரமணியன் பொன்ராஜின் ‘சீமுர்க்’

பாலசுப்ரமணியன் பொன்ராஜின் சீமுர்க் சிறுகதைத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என்று கருதும் கதையான ‘சீமுர்க்’ கதையைப் படிக்கும்போது புனைவும்,  மெய்யியலா என்ற கேள்வியை என்னால் தவிர்க்க இயலவில்லை.  சிந்தனையும் புனைவும் விமர்சனப் பார்வையும் மேலோங்கிய பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கதைகளை போர்ஹே கதைகளை வரையறுப்பது போல ஹைப்ரிட் கதைகள் என்று வரையறுத்துக் கொள்ளலாம். போர்ஹேசின் சிறுகதையொன்றில் ஒரு வாக்கியம் வரும். அவன் தன்னைப் பற்றி பிறர் கருதும்போது தனது வருங்கால சாதனைகளையும் சேர்த்து வைத்து மதிப்பிட வேண்டுமென்று விரும்புபவனாகவும், பிறரை அவர்களது கடந்தகாலச் செயல்களை வைத்து மதிப்பிடுபவனாகவும் இருந்தான் என்று போர்ஹெஸ் எழுதியிருப்பார். இந்த வாக்கியம் போர்ஹெசின் கதாபாத்திரத்துக்கு மட்டுமல்ல; நம்மில் பெரும்பாலானவர்களின் மனப்போக்குக்குப் பொருந்தக்கூடிய பொதுவான மனித இயல்பு குறித்த கண்டுபிடிப்பு அதில் இருக்கிறது.  மெய்யியலும் அறிவியலும் போலவே இந்தப் பூமியில் நமது உயிர் இருப்பு என்னவாக இருக்கிறது என்பதைச் சிந்திக்கும் மாற்று முறைமைகளாகவே கவிதையும், சிறுகதையும், நாவலாக இருக்கிறது. மூளை நரம்பிய...

அனோஜனின் ‘தீக்குடுக்கை’

ஈழத்தைச் சேர்ந்த இளம் சிறுகதை ஆசிரியராக எனக்குப் பெயரளவில் பரிச்சயமான அனோஜன், அகழ் இணைய இதழின் ஆசிரியர்களில் ஒருவர். நண்பர் விஷால் ராஜா வழியாக தொலைபேசியில் உரையாடத் தொடங்கி, தொடர் பேச்சுகள், சில நேரடி சந்திப்புகள் வழியாக நெருக்கத்துக்குரிய நண்பராகவும் ஆகிவிட்டவர். தனது முதல் நாவலுக்கான ஊக்கத்தை எனது கட்டுரையொன்றின் வாயிலாகப் பெற்றதாக தனது நாவலுக்கான முன்னுரைக் குறிப்பில் எழுதியுள்ளதைப் பார்த்தபோது கூடுதல் மகிழ்ச்சியை உணர்ந்தேன். எனது இணையத்தளம் போக, எனது எழுத்துகளைத் தொடர்ந்து வெளியிடும் மேடையாக இருந்துவரும் அகழ் தொடர்பிலான உறவு விஷால், அனோஜனுடனான தொடரும் நட்பு, உரையாடல், தகராறுகளின் இணைச் செயல்பாடும்தான். இந்தப் புத்தகத் திருவிழாவில் சால்ட் பதிப்பகம் வெளியிட்ட அனோஜன் பாலகிருஷ்ணனின் முதல் நாவலான ‘தீக்குடுக்கை’க்கு பின் அட்டைக் குறிப்பாக எழுதியது இது. 000 அகத்திலும் புறத்திலும் போர்களும் பிளவுகளும் முரண்பாடுகளும் கூச்சலிடும் ஒரு நூற்றாண்டில் கண்விழித்து, அந்தத் துர்க்கனவின் கோரத் தீண்டலுக்கும் அதனால் ஏற்பட்ட சிதைவுக்கும் உள்ளாகியிருப்பவர்கள் குழந்தைகள்தான்.மத்தியக் கிழக்கிலும் உக்ரைனிலு...