“ மைசூரில் கன்னடம், தமிழ், ஆங்கிலம் சரளமாகப் புழங்கிய குடும்பத்தில் 1929 ஆம் ஆண்டு பிறந்தவர் அத்திப்பட்டே கிருஷ்ணசாமி ராமானுஜன். கணிதம் மற்றும் புள்ளியியல் பேராசிரியராக இருந்த தந்தையார் அறிவுஜீவி வாழ்க்கைக்கான ஆதர்சமாக இருந்திருக்கிறார். அம்மா கல்லூரிப் படிப்புக்குச் சென்றிருக்காவிட்டாலும் தமிழிலும் கன்னடத்திலும் விரிவாக வாசித்தவர். ஆச்சாரமானவர்களாக பெற்றோர் இருந்தாலும், வைதீகம், சடங்குகள், இறுக்கமான நம்பிக்கைகளிலிருந்து ஏ. கே. ராமானுஜன் சிறுவயதிலேயே வெளியேறுவதற்கு அவர் கற்ற கல்வி உதவியிருக்கிறது. கிறிஸ்தவ திருச்சபை பள்ளிக்கல்வி மூலம் ஆங்கில வாசிப்பில் சிறுவயதிலேயே மூழ்கத்தொடங்கியதாகச் சொல்கிறார். தமிழின் சங்க கவிதைகள், கன்னட வசனகவிதைகளை சர்வதேச அளவில் சுவாரசியமாக மொழிபெயர்த்து அறிமுகப்படுத்தியவர் என்பது அவரது பிரபலமான அடையாளம். வாய்மொழிக் கதைகள், தாலாட்டுப் பாடல்கள், நாட்டார் பாடல்கள், பழமொழிகள் மூலம் ஒரு கலாசாரத்தை தீவிரமாக ஆராயமுடியும் என்று வெளியுலகத்துக்கு உணர்த்திய இந்திய அறிஞர்களில் முதன்மையானவர் ராமானுஜன். பேராசிரியர், ஆய்வாளர், மொழியியலாளர் என பல அடையாளங்களைத் தாண்டி முத...