Skip to main content

Posts

Showing posts from September, 2025

வலிகளுக்கு விடைசொல்லிப் போய்விட்டார் ரமேஷ்

பிரேம், ஷங்கர், ரமேஷ் (புகைப்படம்:குட்டி ரேவதி, 2002) சென்ற நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்த கோட்பாட்டு எழுத்துகளை அறிமுகப்படுத்தியவர்களே, கூடுதல் பரபரப்போடும் மேட்டிமைத்தனத்தோடும் வன்முறையோடும் தங்கள் எழுத்துகள் வழியாக வெளிப்பட்டுக்கொண்டிருந்த சிறுபத்திரிகை சூழலில் அழுத்தமாக அறிமுகமான பெயர்களில் ஒன்று ரமேஷ்-பிரேம். அ.மார்க்ஸ், ரவிக்குமாரின் எழுத்துகள் நன்றாகத் தொடர்புறுத்துபவை. பூக்கோவையும், ரோலன் பார்த்தையும், ஆஷிஸ் நந்தியையும், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸையும், பின்னர் ஆங்கிலம் அறிந்தபின்னர் படித்தபோது இவர்கள், அந்த ஆசிரியர்களுக்குச் செய்தது எத்தனை பயங்கரமென்று உணரமுடிந்தது.  ரமேஷ்- பிரேம் இருவரும் சேர்ந்து எழுதிய ‘கிரணம்’ குறுங்காவியம் என்னை முழுமையாக ஈர்த்த படைப்பு. புரிந்தும் புரியாமலும் அச்சத்துடனும் ‘ புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும் ’ நாவலையும், ‘ஆதியிலே மாமிசம் இருந்தது’ நாடகங்களையும் வாசித்திருக்கிறேன். ‘புதைக்கப்பட்ட மனிதர்களும் எழுதப்பட்ட மனிதர்களும்’ நாவலின் அட்டைப்படத்தில் உள்ள தாழியில் வைக்கப்பட்ட சடலத்தின் கோரமான...

மரணத்தைக் கலையாக்கிய காந்தி

ஓவியம்: ஆதிமூலம் ‘காந்தி – அஹிம்சையின் முடிவு’ நூலைப் படித்து முடிக்கும்போது, அசோகமித்திரன் எழுதிய சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘காந்தி’யின் வாக்கியம் கூடுதலாக நம்மை அறைந்து எதிரொலிக்கிறது. ‘உண்மை கசப்பானது’ என்ற வாக்கியமே அது. சத்தியத்தின் கண்ணாடியில் நெருக்கமாகத் தன் சுயத்தை, வாழ்க்கை முழுக்க பிரதிபலித்துப் பார்த்துக்கொண்டேயிருந்த காந்தியும் அவரது சமகாலத்தவருக்கு மட்டுமல்ல இன்றைய தலைமுறையினருக்கும் ஏன் வரலாற்றுக்கும் கூட, விழுங்கிச் செரிக்க இயலாத கசப்பானதொரு வியக்தியென்ற உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் நூல் இது. இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் பிரிவினையின்போதும் இனப்படுகொலை என்று சொல்லப்படக்கூடிய அளவில் நடந்த இந்து – முஸ்லிம் மோதல்களைச் சுற்றி காந்தியும், அவரது அஹிம்சையும், அவர் தன் சுயத்துடன் மேற்கொண்ட அசாத்தியமான வீரமும், காந்தியை அவநம்பிக்கையை நோக்கி, துயரத்தை நோக்கி அலைக்கழிப்பை நோக்கி எப்படித் தள்ளியது என்பதைப் பகுப்பாய்வு செய்யும் நூல் இது. 000 இருபதாம் நூற்றாண்டில் உலகளவில் மூன்று இயக்கங்கள் வரலாற்றுப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி வெகுமக்களின் வாழ்க்கை மீதும் தாக்கத்தை ஏ...

முதல் வெளிச்சம்

  தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து விரட்டிய பைத்தியமும் பாட்டியால் ரகசியம் காக்கப்பட்ட தாய் தந்தையரின் சாவும் அமானுஷ்யம் பூண்டிருந்த மாளிகையின் அறையில் அடைக்கப்பட்ட மூத்த சகோதரனின் நள்ளிரவு ஓலங்களும் சாமங்களில் விடாது ஒலித்த ஆந்தையின் அலறலும் இடைவெளியின்றி அவன் தலையில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. குழப்படிகள் மற்றும் நிச்சயமின்மைகளின் கனத்த இருட்டிலிருந்து தர்க்கத்தின் வெளிச்சத்தை, அதன் நிச்சயத் தன்மையைக் கனவுகண்டு சிறுவன் பெட்ரண்ட் ரஸ்ஸல், டிரினிட்டி கல்லூரிக்கு நகர்ந்தான். முதல் காதலி ஆலிஸை 17 வயதில் ரஸ்ஸல் அங்கேதான் சந்தித்தான். வேட்கையின் களங்கமும் காதலின் தூய்மையும் ரஸ்ஸலை புதிதாகப் பிளந்தன. நாகரிகத்தின் பாவனையும், விவேகத்தின் தர்க்கமும் வாலிபன் ரஸ்ஸல் மீது அடுத்த தாக்குதலைத் தொடுத்தன. டிரினிட்டி கல்லூரியின் பரந்த பூங்காவில், ஆளரவமற்ற பிற்பகல் பொழுதொன்றில், ஒரு எலுமிச்சை மரத்துக்குக் கீழே, தனது மார்பகங்களைத் திறந்து முத்தமிட ரஸலுக்கு ஈந்தாள் ஆலிஸ். அதுவரை அனுபவித்த இருட்டெல்லாம் படீர் படீர் என வெடித்தது; ஒருகணம் பெட்ரண்ட் ரஸ்ஸலின் தலைக்கோலம் பளீர் வெளிச்சம் கண்டது. (நன்றி: அகழ் இண...