பிரேம், ஷங்கர், ரமேஷ் (புகைப்படம்:குட்டி ரேவதி, 2002) சென்ற நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்த கோட்பாட்டு எழுத்துகளை அறிமுகப்படுத்தியவர்களே, கூடுதல் பரபரப்போடும் மேட்டிமைத்தனத்தோடும் வன்முறையோடும் தங்கள் எழுத்துகள் வழியாக வெளிப்பட்டுக்கொண்டிருந்த சிறுபத்திரிகை சூழலில் அழுத்தமாக அறிமுகமான பெயர்களில் ஒன்று ரமேஷ்-பிரேம். அ.மார்க்ஸ், ரவிக்குமாரின் எழுத்துகள் நன்றாகத் தொடர்புறுத்துபவை. பூக்கோவையும், ரோலன் பார்த்தையும், ஆஷிஸ் நந்தியையும், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸையும், பின்னர் ஆங்கிலம் அறிந்தபின்னர் படித்தபோது இவர்கள், அந்த ஆசிரியர்களுக்குச் செய்தது எத்தனை பயங்கரமென்று உணரமுடிந்தது. ரமேஷ்- பிரேம் இருவரும் சேர்ந்து எழுதிய ‘கிரணம்’ குறுங்காவியம் என்னை முழுமையாக ஈர்த்த படைப்பு. புரிந்தும் புரியாமலும் அச்சத்துடனும் ‘ புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும் ’ நாவலையும், ‘ஆதியிலே மாமிசம் இருந்தது’ நாடகங்களையும் வாசித்திருக்கிறேன். ‘புதைக்கப்பட்ட மனிதர்களும் எழுதப்பட்ட மனிதர்களும்’ நாவலின் அட்டைப்படத்தில் உள்ள தாழியில் வைக்கப்பட்ட சடலத்தின் கோரமான...