ரியர் விண்டோ சினிமாவில், கால்முறிந்ததன்
காரணமாக, வீட்டிலேயே ஓய்வெடுக்க நேரும் புகைப்படக்காரன் ஜெஃப், தன் நேரத்தைக் கழிக்க அண்டை வீடுகளை, தன் வீட்டு ஜன்னல்வழி வேடிக்கை பார்க்கத் தொடங்குகிறான். தன்னை
ஒரு ஜோடிக்கண்கள் பின்தொடர்வதை அறியாத ஒரு மாடிவாசி- அவள் பெயர் செல்வி.டார்சோ- நடனபாவத்தில்
தன் பிராவை உற்சாகமாகக் கழற்றி எறிகிறாள். ஜெஃப்பின் ஜூம்லென்ஸ் மேலே செல்கிறது. செல்வி.
டார்சோவின் வீட்டின் கூரையில் புறாக்கள் மேய்கின்றன. செல்வி. டார்சோவின் நடனம் நிற்காமல் தொடர்கிறதா ஹிட்ச்காக்? அவள் வீட்டுக்கூரையில் மேய்ந்த புறாக்கள் இப்போது எங்கே மேய்கின்றன? ஹிட்ச்காக்!
கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது. இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந
Comments