Skip to main content

துக்கம்



ஷங்கர்ராமசுப்ரமணியன்
 
கனவில் ஒரு வீட்டின்
ஜன்னலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
ஜன்னல் வழி தெரியும்
அறையில்
ஒரு பெண்
வயது தெரியவில்லை
யுவதியும் அல்ல
வெறும் பாவாடை ரவிக்கையுடன்
வந்து நிற்கிறாள்
உடை மாற்றப் போகிறாள் போலும்
மனமும் கண்களும் கூர்மையடைந்து விட்டன
கடைசி உடையை அவள் நழுவ விட்டபோது
எனக்கும் ஜன்னலுக்கும் நடுவில்
நின்ற மரத்தின் உச்சியிலிருந்து
ஹோவென்று
ஒரு புறா
அந்தக் கணத்தை மறைத்து
விழுந்ததில்
நான் பார்க்கத் தவறியதை
அப்போதும் 
பார்க்கத் தவறிவிட்டேன்.

Comments