Skip to main content

ஆக்டோவியா பாஸ் கவிதை


காற்றும் நீரும் பாறையும்


நீர் பாறையை உள்ளீடற்றதாக்கியது
காற்று நீரைத் தூவியது
பாறை, காற்றை நிறுத்தியது.
நீரும் காற்றும் பாறையும்

காற்று, பாறையைச் செதுக்கியது
ஒரு குவளை நீர், பாறை
நீர் வழிந்து செல்கிறது, காற்றும்
பாறையும் காற்றும் நீரும்.

காற்று தனது திருப்பங்களில் பாடுகிறது
நீர் ஓடிச் செல்லும்போது முணுமுணுக்கிறது
நகராத கல் அமைதிகாக்கிறது
காற்றும் நீரும் பாறையும்.

ஒன்று, மற்றதுதான்
என்பதோடு
இரண்டுமே இல்லாதது:
அவற்றின் காலிப் பெயர்களினூடாக
அவை கடந்து மறைகின்றன,
நீரும் பாறையும் காற்றும். 

Comments

எல்லாம் ஒன்றுடன் ஒன்று பிணைந்து தான் இருக்கிறது தோழர்