நேர்காணல்  செய்தவர்  : நதன்  கார்டல்ஸ்         இருபதாம்  நூற்றாண்டின்  மகத்தான  கவிஞர்களில்  ஒருவர்  செஸ்லோ  மிலோஸ் . நோபல்  பரிசு  பெற்றவர் . தீவிரமான  மோதல்கள்  கொண்ட  உலகத்தில்  வாழ  விதிக்கப்பட்ட  மனிதனின்  குரல்  என்று  நோபல்  பரிசுக்  கமிட்டியின்  குறிப்பு  இவரது  கவிதைகளைப்  பற்றித்  தெரிவிக்கிறது . மனம்நிறை  கவனம்தான்  இவரது  சமயத்துவம்  என்பதை  இந்த  நேர்காணல்  மூலம்  தெரியப்படுத்துகிறார் .     கேள்வி : உங்கள்  கவிதைத்  தொகுப்பில்  கதேயின்  மேற்கோள்  ஒன்றைத்  தந்திருக்கிறீர்கள் . “ நலிவின்  காலகட்டங்களில் , எல்லா  மனப்போக்குகளும்  தன்னிலை  சார்ந்ததாக  இருக்கும் ; ஒரு  புதிய  சகாப்தத்துக்கான  கனிதல்  ஏற்படும்போது  அனைத்து  மனப்போக்குகளும்  புறநிலையில்  இருக்கும் ” . உங்களைப்  போன்றே  கதேயும்  புறநிலைக்  கலையைப்  பாராட்டுகிறார் . கற்பனாவாதப்  போக்குக்கு  செவ்வியல்  காலம்  வழிவிட்ட  கதேயின்  காலகட்டத்திலேயே  இசையில்  புறநிலை  ஒழுங்கு  குலைந்தது  என்றும்  நீங்கள்  கருத்து  தெரிவித்திருக்கிறீர்கள் . புறநிலைக்  கலை  என்று  எதைக்  குறிப்பிடுகிறீர்கள்  என்பதை  வ...