Skip to main content

Posts

Showing posts from October, 2025

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

விழுவதற்காக நியூட்டன் மரத்தின் கிளையை அர்ஜூனனாய் பார்த்துக்கொண்டே இருந்தார். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று ஆப்பிள் நியூட்டனைப் பார்த்து ஏகடியம் பேசியது. ஒங்கொம்மால என்று பின்பக்கம் படிந்திருந்த புழுதியை உதறிவிட்டுக்கொண்டே எழுந்த நியூட்டன் கீழே கிடந்த கல்லை எடுத்து படாரென்று ஆப்பிளின் காம்பை குறிவைத்துத் தாக்கினார்.

மான்கள்

மரங்கள் கல்லறைத் தூபிகள் இடையிடையே தலையைத் திருப்பி சிலைத்து நிற்கும் மான்கள். (நன்றி: அகழ் இணைய இதழ்)

காடு

அவனுக்கும் அவளுக்கும் இரண்டிரண்டு முள்ளம்பன்றி முட்களை சமப்பரிசாய் கொடுத்தது காடு. வாழ்வு மரணம் அழகு கோரம் அன்பு வெறுப்பு இடையில் நிற்கும் வேலியில் தந்திரங்கள் எதையும் பயிலாத மூன்று நரிகள் அப்போதுதான் விடிந்து உடைந்துகொண்டிருக்கும் வெளிச்சத்தில் கடந்துபோகின்றன. நடந்து கடப்பவர்களுக்குத் கொடும் வலியை தற்காலிகமாகக் கொடுக்கும் கட்டெறும்பின் தலையிலுள்ள நுண்கொடுக்கு மட்டும் எப்போதும் எரிநிலையில். (நன்றி - அகழ் இணைய இதழ்)

ராகுதசை

பாம்பின் உடல் மனிதத் தலை கொண்ட ராகு தசை நடப்பதால் நிலைகொள்ளாத இன்பவாதைகளின் மேடையாக உன் கபாலம் திகழும் என்றான் ஜோதிடன். மணி, மனத்தில் தொடங்கி மனத்தில் வரைந்து முடிக்கும் வாழ்வுதான் உனக்கு என்று சொன்னவள் அம்மா. (நன்றி: அகழ் இணைய இதழ்)