Skip to main content

Posts

Showing posts from January, 2026

எனது புதிய நூல்கள் குறித்து ஏ.வி.மணிகண்டன் உரையாடல்

  ‘நீல குண்டு பல்பு’ கவிதையை நீங்கள் எழுதும் போது நானும் உடனிருந்தேன். அன்று காலை இருவரும்தான் அதைக் கண்டோம். எனக்கு அது நீலக்கடலின் கண்ணாக, பிக்காஸோவின் குவெர்னிக்காவில் வரும் நம்பிக்கை தரும் கண்ணின் மணியாக (கரு விழியை அவர் குண்டு பல்பாகதான் உருவகித்திருக்கிறார், அறிவியலின்/நவீனத்துவத்தின் மீதான நம்பிக்கையாக) தோன்றியது. நீங்கள் அந்த அருவச் சித்திரத்திலிருந்து முன்னகர்ந்து ஒரு முழு வாழ்க்கையைக் கண்டிருக்கிறீர்கள். அது உங்கள் கவிதைகளின் உச்சங்களில் ஒன்று எனத் தோன்றுகிறது. அக்கணத்தில் குண்டு பல்பின் காட்சியிலிருந்து எப்படி இரவில் விழித்திருந்து தாலாட்டும் அன்னையை சென்றடைந்தீர்கள்? நான்  உருவத்திலிருந்து அருவத்திற்கு சென்றேன். நீங்கள் அருவத்திலிருந்து வாழ்க்கையின் ஒரு கணச் சித்திரத்திற்கு சென்று அங்கிருந்து வாழ்க்கை முழுவதையும் கண்டிருக்கிறீர்கள்? பெசண்ட் நகர் உடைந்த பாலம் கழிமுகப் பகுதியில் கடலுக்குள் செல்லாமல் கரையில் மிஞ்சும் கைவிடப்பட்ட பொருள்களில் ஒன்றுதான் நாம் அன்று கண்ட நீல குண்டு பல்பு. கடல் மணலில் பாதி புதைந்து முட்டை போல ஒளிர்ந்தபடி இருந்த படம் எனக்கு என்றைக்கும் மறக்க...

எஸ். ராமகிருஷ்ணனின் ‘குற்றமுகங்கள்’

எனக்கு 21 வயதில் திருநெல்வேலியில் பாதி இடிபாடுகளோடு இருந்த சிந்துபூந்துறை பழைய கம்யூனிஸ்ட் கட்சிக் கட்டடத்தில் நடந்த நூல் அறிமுகக் கூட்டத்தில் கோணங்கியுடன் சேர்ந்து எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகமானார். தாவரங்களின் உரையாடல் சிறுகதைத் தொகுப்பை காலை வெளியிட்டு மிகவும் தீவிரமான உரையாடல் நாள்முழுவதும் நிகழ்ச்சிக்குப் பிறகும் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. காலச்சுவடில் லக்ஷ்மி மணிவண்ணன், மனுஷ்யபுத்திரன் ராமகிருஷ்ணனை எடுத்திருந்த பேட்டியும் உதிரியாகப் படித்திருந்த சிறுகதைகளும் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அப்படித்தான் அவருடன் பழக்கமும் உரையாடல்களும் ஆரம்பித்தது. திருநெல்வேலி, நாகர்கோவில் சுங்கான்கடை, கோயில்பட்டி, சென்னை என சில ஆண்டுகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவருடன் பேசும் வாய்ப்புகளைத் தேடி உருவாக்கிக் கொண்டிருந்தோம். சென்னை முகப்பேரில் புதிய வீடுகளைக் கட்டுவதற்காக பல்வேறு இடங்களில் குவிக்கப்பட்டிருந்த மணலில் பல இரவுகளை தளவாயும் நானும் நண்பர்களும் எஸ்.ராவோடு பேசி நள்ளிரவுகளைக் கடந்திருக்கிறோம். இன்றும் என் கவிதை உலகின் சாரமாக ராமகிருஷ்ணன் உரையாடல்கள...