என் அரசியலில் இருந்தே எனது கதைகள் பிறக்கின்றன        சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன்     கடந்த  15 ஆண்டுகளில்  தமிழ்  இலக்கியப்பரப்பில்  நடந்த  முக்கியத்துவம்  வாய்ந்த  படைப்பு  நிகழ்வு  ஷோபா  சக்தி . ஈழத்தமிழர்  போராட்டம்  பெற்றெடுத்த  குழந்தை  என்று  ஷோபா  சக்தியை  நிச்சயமாகக்  கூறலாம் . இவர்  முன்னணிக்  கதாபாத்திரம்  ஏற்று  நடித்த , அகதிகள்  படும்  துயரத்தைப்  பேசும்  பிரெஞ்சுத்  திரைப்படமான  ‘ தீபன் ’, கான்  திரைப்படவிழாவில்  தங்கப்பனை  விருதும்  பெற்றுள்ளது … சமீபத்தில்  சென்னை  வந்த  அவரிடம் தி இந்து தமிழ் நாளிதழுக்காக எடுக்கப்பட்ட நேர்காணலின் முழுமையான வடிவம் இதோ….       உங்களது புதிய நாவலான ‘பாக்ஸ் கதைப் புத்தகம்’ குறித்து சொல்லுங்கள்?    முள்ளிவாய்க்காலில் நடந்த பேரழிவுக்குப் பிறகு வன்னி பகுதி கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் யுத்தத்தின் வடுக்கள் குறித்த கதை இது. யுத்தம் எமது மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்புகள், பேரழிவுகள் எல்லாமும் செய்திகளாகக் கட்டுரைகளாகப் பதிவாகியிருக்கின்றன. அதை இலக்கியமாகப் பதிவுசெய்திருக்கிறேன்.     இந்த நாவலுக்கென்று தனியாக கள...