முல்லா  நஸ்ரூதின்  ஒரு  ஐந்து  நட்சத்திர  விடுதியில்  தங்கியிருந்தார் . வீட்டிலிருந்து  அவசரமாகத்  தந்தி  ஒன்று  வந்ததால்  அவசர  அவசரமாக  பெட்டி  படுக்கைகளைக்  கட்டி , ரயிலைப்  பிடிக்க  தரைத்தளத்திற்கு  வந்தார் . கட்டணத்தைச்  செலுத்தி  ரசீதை  வாங்கியபிறகு , காரில்  ஏறப்போகும்போதுதான்  அவருக்கு  தன்  குடையை  அறையிலேயே  தவறவிட்டு  வந்தது  தெரியவந்தது .     முல்லா  நஸ்ரூதின்  விடுதிக்குள்  நுழைந்து  லிப்டில்  ஏறி  தனது  அறைக்குச்  சென்றார் . 14- வது  மாடி  அது . முல்லா  தங்கியிருந்த  அறை  ஏற்கனவே  ஒரு  புதுமணத்  தம்பதிகளுக்கு  ஒதுக்கப்பட்டிப்பதாக  தகவல்  தெரிய  முல்லா  தன்  அறையின்  முன்னால்  என்ன  செய்வதென்று  தெரியாமல்  குறுக்கும்  நெடுக்குமாக  அலைந்தார் .     ரயிலுக்குச்  சீக்கிரமே  கிளம்பவேண்டிய  நெருக்கடி  இருப்பினும்  முல்லாவால்  சபலத்தைக்  கைவிட  முடியவில்லை . அறையின்  கதவுத்  துவாரம்  வழியாக  உள்ளே  நடப்பதைப்  பார்க்கத்  தொடங்கினார் .       அவர்கள்  புதுமணத்  தம்பதிகள் . திருமணச்  சடங்குகளால்  மிகவும்  களைப்படைந்து , விருந்தினர்கள்  உறவினர்களின்  தொல்லையில்லாமல்  அ...