Skip to main content

இந்தக் காட்சிதான் கபீரை சேவகனாக்கியது





நனவு

நனவிலி

இரண்டு கம்பங்களுக்கிடையே

மனம் ஒரு ஊஞ்சலை இடுகிறது

அங்குதான் எல்லா உயிர்களும்

எல்லா உலகங்களும் ஆடுகின்றன

அவற்றின் அலைவோ தீராதது

சூரியன் மற்றும் சந்திரனின்

போக்கும் வரவும் அங்கேதான்

லட்சக்கணக்கான யுகங்கள்

      கடந்துபோகின்றன

ஊஞ்சல் ஆடுகிறது.

எல்லாம் ஆடுகின்றன!

வானமும் பூமியும் காற்றும் நீரும்கூட

மற்றும் பகவானும் அங்கேதான்

 வடிவமெடுக்கிறான்

இந்தக் காட்சிதான் கபீரை

ஒரு சேவகனாக்கியது.

- ஆங்கிலத்தில் ரவீந்திரநாத் தாகூர் | தமிழில் : ஷங்கர்

Comments