Skip to main content

ராணியென்று தன்னையறியாத ராணி



மலைச்சரிவிலுள்ள
அந்தச் சிறுவீட்டின்
வாசல்படியில்
கன்னத்தில் கைபதித்து
மென்சோகத்துடன்
காத்திருக்கிறாள்
ராணியென்று
தன்னையறியாத
ராணி

000

மரணம் எதுவென
ராணியிடம் கேட்டேன்.
புலன்களின்
ஜன்னல்களை
ஒவ்வொன்றாகச்
சாத்தி
ஒளிகசியும்
துளைகள்
அனைத்தையும்
மெழுகினால்
அடைத்து
கடைசியில்
உன்னைச் சூழும் இருள்
என்று சொல்லி
அவசர அவசரமாய்
நீங்கிப் போனாள்.
நானும்
சரிதான்
சரிதான்
என்றேன்.

Comments