Skip to main content

பலூன் கோடாரி




பலூனில்
நான் ஒரு கோடாரி செய்வேன்
என் வன்மம் அவ்வளவையும்
அதில்
காற்றாய் நிரப்புவேன்
முதுகில் தொங்கியபடி
காற்றிலாடும் என் கோடாரியுடன்
ஒருமுறை நான் நகர்வலம் புரிவேன்
முற்றத்தில் இட்ட
கோலத்தின்
பறவைகள் மறையும்
நண்பகலில்
என் கோடாரியுடன்
நான் காற்றில் பறப்பேன்.

Comments