பலூனில்
நான் ஒரு கோடாரி செய்வேன்
என் வன்மம் அவ்வளவையும்
அதில்
காற்றாய் நிரப்புவேன்
முதுகில் தொங்கியபடி
காற்றிலாடும் என் கோடாரியுடன்
ஒருமுறை நான் நகர்வலம் புரிவேன்
முற்றத்தில் இட்ட
கோலத்தின்
பறவைகள் மறையும்
நண்பகலில்
என் கோடாரியுடன்
நான் காற்றில் பறப்பேன்.
Comments