Skip to main content

அநித்யச் சிவப்பு

 


 

செம்மை ஏறியிருந்த

அந்தச் சாயங்காலம்

விரைவாக

அந்திக்கருமை நோக்கி

சைதாப்பேட்டை

பாலத்தில்

விசுக்கென போய்க்கொண்டிருந்தது

அதன் செம்மையால்

கூடுதல் சிவப்பாகியிருந்த

இரண்டு செவலை நாய்கள்

பாலத்தின் பக்கவாட்டு

நடைபாதையில்

அவற்றின் ஓட்டத்திலேயே

சாயங்காலத்தைச் சந்தித்தன

சிகப்புச் சேலை அணிந்து

மார்க்கெட்டிலிருந்து திரும்பி

எங்கள் முன்னால் போகும்

நடுவயதுக்காரிதான் எங்கள் எஜமானி

என்று சாயங்காலத்திடம்

அறிமுகப்படுத்திக் கொண்டன


அந்தியே நீ இப்போது சிவப்பு

கிழக்கும் மேற்குமாக

எதன்பொருட்டும் இல்லாமல்

பின்னால் ஓடிக்கொண்டிருக்கும்

 நாய்கள்

சிவப்பு

அவை தமது எஜமானி என்று கருதும்

அவளும் சிவப்பு.

Comments

Safnas said…
🥰