Skip to main content

Posts

Showing posts from September, 2026

அருங்காட்சியகத்தில் – ஆஹா சாகித் அலி

  ஆனால்  கி.மு. 2000 இல்  ஹரப்பாவில் வேலைக்காரப் பெண்ணை யார் வெண்கலத்தில் வார்த்தது? வீரர்கள், அடிமைகளின் ஆவணங்களை யாரும் பாதுகாத்து வைத்திருப்பதில்லை! பாகற்காயில் பெருங்காயத் தூளைப் புதுக்கி இறைச்சியைக் கிளறி தரையைத் துடைத்து  சுவர்களைக் கழுவியதால் விடைத்த அவள் விரல்களின் வலிக்கு மெருகூட்ட வேண்டுமென்று சிற்பிக்குத் தெரிந்திருந்தது. வெண்கலத்தில் அவள் என்னைப் பார்த்து சிரிப்பது போல  சிற்பியைப் பார்த்து சிரித்ததற்காக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஒரு குழந்தை தனது எஜமானுக்கு பெரிய மனுஷியாக நடக்க வேண்டியிருந்தது ஜூன் மாதத்தில் ஹரப்பாவுக்கு வெதுவெதுப்பான மழை வந்தபோது.

அவை நல்ல நல்ல

ஓவியம்: நம்பூதிரி வைக்கம் முகம்மது பஷீரின் நீலவெளிச்சம் கதையில் கைவிடப்பட்ட மாளிகை ஒன்றில் தங்கியிருக்கும்  பேயின் பெயர் பார்கவி. பேய்தான்  ஆனாலும் அவள் நல்லமாதிரி. மாற்றிடத்துக்கு வாய்ப்பற்ற கதைசொல்லி  பார்கவியுடன் பழகத்தொடங்கி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பாடல்களை எல்.பி ரெக்கார்டில் இசைத்து நட்பும் கொண்டுவிடுவார்... பாரதியின் கண்ணம்மா நகுலனின் சுசீ கலாப்ரியாவின் சசி லா.ச.ரா. வின் அபி சத்யஜித் ராயின் சாருலதா க.நா.சு.வின் ஹேமா பஷீரின் பார்கவி எம்.டி.வியின் விமலா எல்லாருமே நல்லமாதிரி... ஆனால் அவர்கள் வேறு கோளத்தில் வசிப்பவர்கள் போல. மிக நல்ல நல்ல.

“ராமாயணம் போன்ற காப்பியம் வழியாக மட்டும் இந்தியா காணப்படக்கூடாது” – ஏ. கே. ராமானுஜன் நேர்காணல் – பகுதி 1

அமெரிக்காவில், இந்தியா குறித்த ஆய்வுகளில் தமிழ் பண்பாட்டை தீவிரமான ஆய்வுப்பொருளாக ஆக்கியவர்களில் முதன்மையானவர் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், நாட்டுப்புறவியல் அறிஞர் என பலமுகங்களைக் கொண்ட ஏ. கே. ராமானுஜன். சங்கத் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்த்ததன் மூலம் இதைச் சாத்தியப்படுத்தினார். கன்னட வசனகவிதைகளையும் உலகளவில் கொண்டு சேர்த்தவர். கல்லூரி ஆசிரியராக அவர் மதுரையிலும் தன் இளமைக் காலத்தில் பணியாற்றிய ராமானுஜனின் கவிதைகளிலும் நாட்குறிப்புகளிலும் மதுரை வாழ்க்கை சில காட்சித் துண்டுகளாக இடம்பெறுகிறது. தமிழ் பெற்றோருக்குப் பிறந்த ஏ. கே. ராமானுஜனின் குடும்பம் மைசூரில் குடியேறி நிலைகொண்டது. மைசூரில் தான் வாழ்ந்த வீட்டின் கீழ்தட்டில் தமிழ் புழங்கியதாகவும், அப்பா அதிக நேரத்தை செலவழித்த மாடியில் ஆங்கிலம் புழங்கியதாகவும், பொதுவெளியில் கன்னடம் இணைப்பு மொழியாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். வேதங்கள், காப்பியங்கள் மூலமாகவன்றி குழந்தைகள், பெண்களின் வாய்மொழிக் கதைகள் வாயிலாக இந்திய சிந்தனை முறையை ஆராய வழிவகுத்தவர் ஏ. கே. ராமானுஜன். மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஏ.எல்.பெக்கெர், கீத் டெய்லர் இருவரும் சேர்ந்து எடுத...