Skip to main content

பாப்பா பாப்பா


ஷங்கர்ராமசுப்ரமணியன்

ஆற்றுப்படுத்துவதற்கு எல்லாரும்
இருப்பதால் 
அழுகிறாயா பாப்பா
பருப்பும் நெய்சோறும்
அடுத்து தயிரமுதும் இருப்பதால்
பிடிவாதமாய் மறுத்து
சிணுங்குகிறாயா பாப்பா
உன்னால்தான்
உன் உயிரழுகையின் 
ஒலியால்தான்
இந்த உலகம் திரும்பத் திரும்ப
உயிர்க்கிறதென்பதை
ஞாபகப்படுத்துவதற்கு
திரும்பத் திரும்ப
அழுகிறாயா பாப்பா

Comments