Skip to main content

Posts

செர்னோபில்: சினிமாவின் அடுத்த யுகம்

  ஷங்கர்ராமசுப்ரமணியன் எச்பிஓ தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான ‘ செர்னோபில் ’, முட்டாள்பெட்டி   என்ற அடைமொழியிலிருந்தும் , அதன் எல்லையற்ற விடலைத்தனத்திலிருந்தும் அகன்று , தொலைக்காட்சி முதிர்ச்சியடைந்துள்ளதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது ; அந்த ஊடகத்தின் வரையறைகள் , எல்லைகளை அநாயாசமாக விஸ்தரிக்க இயலுமென்ற அடையாளமாக மாறியுள்ளது . சினிமாவின் அடுத்த பரிணாமம் என்ன என்ற கேள்விக்கான பதிலை அளித்துள்ளது . மனித குல வரலாற்றிலேயே பெரும் சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்திய செர்னோபில் அணு உலை விபத்துக்குக் காரணமாக அரசும், அதிகாரிகளும், அதிகாரத்துவமும் உண்மைகள் என்ற பெயரில் ஒவ்வொரு நிலையிலும் தெரிவித்த பொய்களைப் பற்றி செர்னோபில் குறுந்தொடர் பேசுகிறது. மனித குலம் சந்தித்த ஒரு பேரழிவு விபத்தைக் களனாகக் கொண்டு இயக்குநர் ஜோஹன் ரென்க் நிகழ்த்தியிருக்கும் மாபெரும் மனித நாடகம் இது . உண்மையைக் குறைத்துச் சொல்வது , உண்மையை நீர்க்கச் சொல்வது , உண்மையைத் தள்ளிப்போடுவது , உண்மையைக் கிடப்பில் போடுவது , உண்மையை ரகசியங்களென்று பதுக்குவது ,...

இரட்டை இளவரசிகள்

ஒளிரும் பச்சை இலை காம்புகளில் நின்று செம்போத்துப் பறவை தளிர்களை இடையறாமல் கொத்த மரம் வசந்தத்தின் ஒளியில் குளிப்பதாய் நேற்று ஒரு கனவு . 000 உன் உதட்டிலிருந்து அவள் இதழுக்கு நீ சாக்லேட் திரவத்தை இடம் மாற்றும்போது என்றுமில்லாத நடன அசைவில் அவள் உடைகளை சுழன்று களையும்போது தாதிக்கும் , தாய்க்கும் பிறகு யாருமே தீண்டாத உன் காதுமடலை அவள் பற்றிக் கடிக்கும்போது உன் வீட்டின் சிறுமரத்தினடியில் கொம்புள்ள சில வரிக்குதிரைகள் மேய்ந்து கொண்டிருந்தன .

பசி வழி செயல் வழி விடுதலை வழி

ஹெர்மன் ஹெஸ்ஸேயின் ‘ சித்தார்த்தன் ’ நாவலில் அந்தணகுமாரன் சித்தார்த்தனும் அவன் நண்பன் கோவிந்தனும் ஞானத்தைத் தேடும்பயணத்தைச் சிறுவயதிலேயே சேர்ந்து தொடங்கி , ஒருகட்டத்தில் பிரிகிறார்கள் . நாவலின் கடைசியில் அவர்கள் சந்திக்கும்போது அவர்கள்வயது நாற்பதுகளின் இறுதியில் இருக்கலாம் . கரிச்சான்குஞ்சு எழுதிய ஒரே நாவல் ‘ பசித்த மானிடம் ’. இந்த நாவலில் கும்பகோணம் அருகேதோப்பூரில் , பால்யத்தைக் கழித்த கணேசனும் கிட்டாவும் திருவானைக்கா பஜாரில் நேருக்கு நேர் சந்திக்கும்போது அவர்களுடைய வயது 60- ஐத் தொட்டிருக்கலாம் . ஞானம் பொதுவானதல்ல ; அவரவர் வாழ்வு வழி என்று ‘ சித்தார்த்தன் ’ நாவல் நமக்கு உணர்த்துவதைப் போலவே , ‘ பசித்த மானிடம் ’ நாவல் , வாழ்க்கை என்பதும் அதன் மூலம் அடையும் உண்மை என்பதும் செயல்வழி என்பதை உணர்த்திவிடுகிறது . சேர்ந்து வாழும் சமூக வாழ்க்கைக்கு அவசியப்படும் குணங்களென்று சமூகம் கற்பித்த அன்பு , தியாகம் , வீரம் மட்டுமல்ல ; எதிர்மறை அம்சங்களென்று நாம் கொலுவறைகளிலிருந்து விரட்டி , நிலவறைகளில் போட்டு வைத்திர...