Skip to main content

Posts

அருந்ததி ராயின் அம்மா

குழந்தைகள் தாங்கள் வந்து விழுந்துவிடும் மண்ணில் நின்று தரிக்கவும், பெரியவர்களாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும் செய்யும் யுத்தகங்கள்தான் இந்த உலகத்தின் பெரும்பாலான கதைகள். அருந்ததி ராய் தன் அம்மா குறித்து எழுதிய நினைவு நூலைப் படிக்கும்போது அந்த எண்ணம் உறுதிப்பட்டது. பிரிவினைக்கால கலவரங்களில் தொடங்கி இன்றைய பாலஸ்தீனம் வரை, போருக்கே தகவமைத்துக்கொள்ளாத நிராயுதபாணிகளான குழந்தைகள் மீதுதான் பெரும் யுத்தங்கள் தொடர்ந்து ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை எதிர்கொண்டு அந்தக் காயங்களுடனும் ஆறாத ரணங்களுடனும் அவர்கள் மிஞ்சி எழுந்து பெரியவர்களாகும் கதையைத்தான் சமீபத்தில் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ என்ற திரைப்படமாகவும் இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சன் எடுத்திருக்கிறார். ஆமாம்; அருந்ததி ராயின் ‘மதர் மேரி கம்ஸ் டூ மீ’ நினைவு நூலை, இரண்டு குழந்தைகள் நடத்திய யுத்தத்தின் கதைகள் என்றும் கொள்ளலாம். முதல் கதை வளர்ந்தும் முரட்டுக் குழந்தையாகவும் முழுமையான அராஜகியாகவும், சர்வாதிகாரியாகவும் இருந்து 89 வயதில் இறந்துபோன மேரி ராயின் கதை. அம்மாவின் கதையூடாகத் தன் கதையைச் சொல்லும் போராளியும் எழுத்துக் கலைஞருமான அருந...

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

விழுவதற்காக நியூட்டன் மரத்தின் கிளையை அர்ஜூனனாய் பார்த்துக்கொண்டே இருந்தார். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று ஆப்பிள் நியூட்டனைப் பார்த்து ஏகடியம் பேசியது. ஒங்கொம்மால என்று பின்பக்கம் படிந்திருந்த புழுதியை உதறிவிட்டுக்கொண்டே எழுந்த நியூட்டன் கீழே கிடந்த கல்லை எடுத்து படாரென்று ஆப்பிளின் காம்பை குறிவைத்துத் தாக்கினார்.

மான்கள்

மரங்கள் கல்லறைத் தூபிகள் இடையிடையே தலையைத் திருப்பி சிலைத்து நிற்கும் மான்கள். (நன்றி: அகழ் இணைய இதழ்)

காடு

அவனுக்கும் அவளுக்கும் இரண்டிரண்டு முள்ளம்பன்றி முட்களை சமப்பரிசாய் கொடுத்தது காடு. வாழ்வு மரணம் அழகு கோரம் அன்பு வெறுப்பு இடையில் நிற்கும் வேலியில் தந்திரங்கள் எதையும் பயிலாத மூன்று நரிகள் அப்போதுதான் விடிந்து உடைந்துகொண்டிருக்கும் வெளிச்சத்தில் கடந்துபோகின்றன. நடந்து கடப்பவர்களுக்குத் கொடும் வலியை தற்காலிகமாகக் கொடுக்கும் கட்டெறும்பின் தலையிலுள்ள நுண்கொடுக்கு மட்டும் எப்போதும் எரிநிலையில். (நன்றி - அகழ் இணைய இதழ்)

ராகுதசை

பாம்பின் உடல் மனிதத் தலை கொண்ட ராகு தசை நடப்பதால் நிலைகொள்ளாத இன்பவாதைகளின் மேடையாக உன் கபாலம் திகழும் என்றான் ஜோதிடன். மணி, மனத்தில் தொடங்கி மனத்தில் வரைந்து முடிக்கும் வாழ்வுதான் உனக்கு என்று சொன்னவள் அம்மா. (நன்றி: அகழ் இணைய இதழ்)

வலிகளுக்கு விடைசொல்லிப் போய்விட்டார் ரமேஷ்

பிரேம், ஷங்கர், ரமேஷ் (புகைப்படம்:குட்டி ரேவதி, 2002) சென்ற நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்த கோட்பாட்டு எழுத்துகளை அறிமுகப்படுத்தியவர்களே, கூடுதல் பரபரப்போடும் மேட்டிமைத்தனத்தோடும் வன்முறையோடும் தங்கள் எழுத்துகள் வழியாக வெளிப்பட்டுக்கொண்டிருந்த சிறுபத்திரிகை சூழலில் அழுத்தமாக அறிமுகமான பெயர்களில் ஒன்று ரமேஷ்-பிரேம். அ.மார்க்ஸ், ரவிக்குமாரின் எழுத்துகள் நன்றாகத் தொடர்புறுத்துபவை. பூக்கோவையும், ரோலன் பார்த்தையும், ஆஷிஸ் நந்தியையும், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸையும், பின்னர் ஆங்கிலம் அறிந்தபின்னர் படித்தபோது இவர்கள், அந்த ஆசிரியர்களுக்குச் செய்தது எத்தனை பயங்கரமென்று உணரமுடிந்தது.  ரமேஷ்- பிரேம் இருவரும் சேர்ந்து எழுதிய ‘கிரணம்’ குறுங்காவியம் என்னை முழுமையாக ஈர்த்த படைப்பு. புரிந்தும் புரியாமலும் அச்சத்துடனும் ‘ புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும் ’ நாவலையும், ‘ஆதியிலே மாமிசம் இருந்தது’ நாடகங்களையும் வாசித்திருக்கிறேன். ‘புதைக்கப்பட்ட மனிதர்களும் எழுதப்பட்ட மனிதர்களும்’ நாவலின் அட்டைப்படத்தில் உள்ள தாழியில் வைக்கப்பட்ட சடலத்தின் கோரமான...

மரணத்தைக் கலையாக்கிய காந்தி

ஓவியம்: ஆதிமூலம் ‘காந்தி – அஹிம்சையின் முடிவு’ நூலைப் படித்து முடிக்கும்போது, அசோகமித்திரன் எழுதிய சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘காந்தி’யின் வாக்கியம் கூடுதலாக நம்மை அறைந்து எதிரொலிக்கிறது. ‘உண்மை கசப்பானது’ என்ற வாக்கியமே அது. சத்தியத்தின் கண்ணாடியில் நெருக்கமாகத் தன் சுயத்தை, வாழ்க்கை முழுக்க பிரதிபலித்துப் பார்த்துக்கொண்டேயிருந்த காந்தியும் அவரது சமகாலத்தவருக்கு மட்டுமல்ல இன்றைய தலைமுறையினருக்கும் ஏன் வரலாற்றுக்கும் கூட, விழுங்கிச் செரிக்க இயலாத கசப்பானதொரு வியக்தியென்ற உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் நூல் இது. இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் பிரிவினையின்போதும் இனப்படுகொலை என்று சொல்லப்படக்கூடிய அளவில் நடந்த இந்து – முஸ்லிம் மோதல்களைச் சுற்றி காந்தியும், அவரது அஹிம்சையும், அவர் தன் சுயத்துடன் மேற்கொண்ட அசாத்தியமான வீரமும், காந்தியை அவநம்பிக்கையை நோக்கி, துயரத்தை நோக்கி அலைக்கழிப்பை நோக்கி எப்படித் தள்ளியது என்பதைப் பகுப்பாய்வு செய்யும் நூல் இது. 000 இருபதாம் நூற்றாண்டில் உலகளவில் மூன்று இயக்கங்கள் வரலாற்றுப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி வெகுமக்களின் வாழ்க்கை மீதும் தாக்கத்தை ஏ...