Skip to main content

Posts

நான்ஸி யார்?

என் சமீபத்திய கவிதைகளில் இடம்பெறும் நான்ஸி யாரென்று கேட்டான் நண்பன். வேளச்சேரியின் புராதன பங்களா வீட்டில் தனியாக வசிக்கும் பூனை என்றேன். நான்ஸியைக் கடக்கும் நான்ஸி அழகின் உச்சாடனத்தைத் தாங்கியிருக்கும் பெயர்கள்… அவற்றுக்கு உடல் இல்லை வீடு இல்லை ஊர் இல்லை காணி இல்லை தெரு இல்லை சுற்றுச் சுவர்கள் இல்லை பூட்டு இல்லை சாவிகூட இல்லை வெறும் நிழல்கள் மட்டுமே என்றபடி நான்ஸி வசிப்பதாகச் சொல்லப்படும் வீட்டைத் தாண்டி இருளுக்குள் சென்று மறைந்தது நான்ஸி. 000 (நன்றி: அகழ் இணைய இதழ்)

அனேகத்தின் ருசி - சார்லஸ் சிமிக் கவிதைகள்

உடல் ஓயும் அதே தருணத்தில் மனமும் நிரோத நிலையில் ஓய்ந்துவிடுகிறது. அதனால்தான் அறிஞர் விட்கன்ஸ்டைன், சாவு என்பது வாழ்க்கையோடு தொடர்புடையதே அல்ல என்கிறார் போலும். உடல் உட்கொள்ளும் புரதம் தரும் சக்தியில் எரிவதுதான் மனம். அதனால், கண்ணுக்குத் தூலமாகத் தெரியும் உடல்தான் உபாதைகளுக்கும் தண்டனைகளுக்கும் வலி வறுமை செல்வநிலை இனம் நிறம் மதம் சாதி அதிகாரம் சார்ந்த பாகுபாடுகளுக்கும் உள்ளாகிறது. கண்ணுக்குத் தெரியாத மனம், அதைத் துயரம், சந்தோஷம், குரோதம், விரோதம் என்ற புறாக்கூண்டுகளில் அடுக்கித் தொகுத்துக்கொள்கிறது. உடலுக்கு நேரும் அனுபவங்களை விசாரித்துச் சலித்துத் தொகுத்துக்கொள்ளும் மனத்துக்கு உயர்நிலையை அளித்த ஒரு மரபின் தொடர்ச்சியாக இருந்த புதுக்கவிதையின் ஐம்பது ஆண்டுகாலப் பயணத்தில், உடல்தான் பிரதானம் என்று ஆதாரமாக ஏற்பட்ட பார்வை மாற்றத்தில்தான் அது, நவீன கவிதையாக உருமாறுகிறது. இது எனது ஊகம். முந்தைய நூற்றாண்டுகளில் தாயுமானவர், வள்ளலார், பாரதியார் முதலியோரில் தொடங்கிய போக்கு, புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம், நகுலன், பசுவய்யா வரை நீண்டது. அத்வைதச் சிந்தனையோடு மோதிமோதி த்வைத உலகைச் சந...

மாம்பழங்கள்

மாம்பழங்களின் பருவம் சமீப ஆண்டுகளாக கோடை தாண்டியும் நீள்கிறது. மாம்பழங்களின் அளவு பப்பாளிப் பழங்களுக்குப் போட்டியாக பெருக்கத் தொடங்கிவிட்டது. மாம்பழங்களின் பருவம் நீளும் போது, அவை பப்பாளிப் பழங்கள் அளவுக்குப் பெருக்கும்போது சற்றே வடுபட்ட மாம்பழங்களை தாராளமாகப் பணிப்பெண்களுக்கு வீட்டுக்காரர்கள் கொடுப்பது நடக்கிறது. பைகளில் தங்கள் குழந்தைகளுக்காக வீட்டுப் பணிப்பெண்கள் அந்த மாம்பழங்களைச் சுமந்து செல்லும்போது மூன்றாம் உலகப் போர் தொடங்கிவிடுகிறது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

முதல் பால் பல்

பிச்சிப்பூ, நெட்டிலிங்க மரங்களின் வரிசையில் தோட்டத்தின் மூலையில் நின்றிருந்த ஒற்றை நாரத்தையின் கீழ் அமர்ந்து முதல் இரவின் கதையை அக்காக்களிடமிருந்து கேட்டிருந்த அனுபமா எனக்கு பரம ரகசியமாய் பரபரப்புடன் தெரியப்படுத்தியபோது எங்களுக்கு வயது வயது ஏழு. ஆணும் பெண்ணும் தொட்டு உடைகளைக் களைந்து நிர்வாணமாகும் காட்சியை அவள் படிப்படியாக விவரித்தபோது அடைந்த கிறுகிறுப்பில் சாயங்காலம் தைலத்தன்மையுடன் கருஞ்சிவப்பானது. ஆணும் பெண்ணும் பரஸ்பரம் அம்மணமாகித் தொடுவதற்கும் குழந்தைகள் பிறப்பதற்கும் உள்ள தொடர்பு அவள் சொல்லித்தான் கலங்கலாக எனக்கு விளங்கியது. பிள்ளையார் தும்பிக்கையால் நள்ளிரவுகளில் அம்மாக்களின் வயிற்றைத் தடவி குழந்தைகளை விட்டுச் செல்வதில்லையா என்று அனுபமாவிடம் கேட்டேன். அன்றைக்குத்தான் வெகுநாள்கள் விழாமல் இருந்த முதல் பால் பல்லும் விழுந்தது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

ஹேமா

அழைத்தாலும் அழைக்காதது போன்று அதலபாதாளத்து  நினைவிலிருந்தெழும் அசரீரியாய் பட்டுமிருதுடன் தொனிக்கும் அவள் பெயர் ஹேமா... சிவனின் மனைவி பார்வதியின் இன்னொரு நாமகரணம் ஹைமவதி என்கிறது புராணம். பொன், தூய்மை என்றும் பொருள்படும் பெயர் ஹேமா. மலையில் காட்டில் நதியில் அருவியில் காற்றாக ஒலிக்கிறது ஆதிப்பெயர்களில் ஒன்றான ஹேமா ஹேமா ஹேமா ஹேமா. (நன்றி: அகழ் இணைய இதழ்)

குயில் குப்பை குப்பி

ஒரு குப்பியை உடை ஒரு குயில் வெளியே வந்து பாடும் ஒரு விடுதலைப் பாடல். எந்தக் குப்பையில் எங்கே ஒழிந்து கிடக்குது ஐயா அந்தக் குப்பி? குயில் குப்பை குப்பி இது என்ன எழவுடா ? நன்றி: அகழ் இணைய இதழ்

பாசிசத்தை நோக்கி இந்தியா: மோடி செய்த மாற்றங்கள் - பிரேம் சங்கர் ஜா

(இந்தியாவை பாசிசத்தை நோக்கி மோடி படிப்படியாக மாற்றிய வரலாற்றை எண்ணற்ற கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் குடியுரிமை, ஜனநாயகப் பாதுகாவலர்கள் விவரமாகப் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் பலரும் , எந்தக் குற்றச்சாட்டும் சொல்லப்படாமல் ஆண்டுக்கணக்கில், பிணையில்லாமல் சிறைத்தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர். பாசிசத்துக்கு இந்தியாவை மோடி எவ்வாறு அழைத்துச் சென்றார்? அந்தப் பயணத்தை பெருங்கோடுகளில் இந்தக் கட்டுரை தீட்டுகிறது.)  1. பன்முகத்தன்மை வாய்ந்த, பல்வேறு இனங்கள் வசிக்கும் ஜனநாயகமென்று முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெருமைப்பட்டு குறிப்பிட்ட அம்சங்களை, அவருக்குப் பின்னால் வந்த நரேந்திர மோடி, பிரதமர் பதவியேற்று சில வாரங்களில்,  அகற்றத் தொடங்கிய முதல் நடவடிக்கை இது. மத்திய அமைச்சகங்கள் இயங்கும் இடங்களின் நுழைவாயிலில் முதலில் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தியதுதான் அந்த முதல் நடவடிக்கை. அத்துடன் பத்திரிகை தகவல் பணியகம்((Press Information Bureau), சிறப்பு செய்தியாளர்கள், மூத்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கிய அடையாள அட்டைகள் வாபஸ் பெறப்பட்டன. பத்திரிகையாளர்கள் எந்த அமைச்சரகத்த...