Skip to main content

உன் பூ


வெளியே நிசப்தத்தில்

தன் மகத்துவத்தின் இருட்டில்

யார் பார்வையும் படாத

இந்நடுச்சாமத்தில்

கொத்துக் கொத்தாய்

பூத்து உதிர்ந்துகொண்டிருக்கும்

சரக்கொன்றை மரமே

எந்தப் பயங்கரத்திலிருந்து

விடாமல்

சொரிகிறது உன் பூ?

Comments