Skip to main content

Posts

இந்திரனின் ஆரத்தில் ஒரு ரத்தினம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் இந்திரனின் மாளிகை ஒன்றை இந்திரலோகத்தின் சிறந்த கலைஞன் நிர்மாணித்தான். அதன் மேல் முகத்திரையைப் போல எல்லையற்ற மடிப்புகள் கொண்ட அனைத்துத் திசையிலும் நீளும் அற்புத வலை ஒன்றையும் தொங்கவிட்டான். இந்திரனைத் திருப்திப்படுத்துவதற்காக அந்த வலையின் ஒவ்வொரு துளையிலும் ஒரு ரத்தினத்தையும் பதித்தான். நட்சத்திரங்களைப் போல அந்த மாளிகை ஓவியமாக மின்னியது. ஒருவர் அருகில் போய் அந்த வலையில் இருக்கும் ஒரு ரத்தினத்தைத் உயர்த்திப் பார்த்தால் அந்த வலையில் தொங்கும் மற்ற எல்லா ரத்தினங்களையும் அது பிரதிபலிக்கும். அதில் பிரதிபலிக்கும் எண்ணற்ற எல்லா ரத்தினமும் மற்ற எண்ணற்ற ரத்தினங்களைப் பிரதிபலித்தன. காரணங்களும் விளைவுகளும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய இணைப்பில் ஒவ்வொரு உயிரும் நிகழ்ச்சியும் இன்னொன்றைப் பிரதிபலித்தபடி உள்ளன என்பதை மகாயான பவுத்தத்தில் இப்படி இந்திரனின் ஆரம் என்ற படிமத்தால் குறிப்பிடுகின்றனர். கோடிக்கணக்கில் பிரதிபலித்தபடியும் பிரதிபலிப்புக்கு உள்ளாகியும் உயிர்களும் நிகழ்ச்சிகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. சமீபத்தில், கவிஞர் இசை எழுதிய ‘போலீஸ் வதனம்’ கவிதையில் அருள்...

பூனைகளுக்குப் பெயரிடுவது

  டி. எஸ். எலியட் பூனைகளுக்குப் பெயரிடுவது சிக்கலான காரியம் அது வெறும் விடுமுறை விளையாட்டுகளில் ஒன்றல்ல ஒரு பூனைக்கு மூன்று பெயர்கள் இருக்கவேண்டுமென்று நான் சொன்னால் நீங்கள் முதலில் என்னை முற்றிய பைத்தியம் என்று நினைக்கலாம் முதல் பெயர் குடும்பத்தினர் பயன்படுத்துவது போல பீட்டர், அகஸ்டஸ், அலான்ஸோ அல்லது ஜேம்ஸ் என்பது போல விக்டர் அல்லது ஜோனாத்தன், ஜார்ஜ் அல்லது பில் பெய்லி என்பதெல்லாம் உருப்படியான அன்றாடப் பெயர்களே கேட்பதற்கு இனிமையாக இருக்க வேண்டுமென நீங்கள் நினைத்தால் ப்ளேட்டோ, அட்மீடஸ், எலக்ட்ரா, டிமிட்டர் போன்ற மோஸ்தரான பெயர்களும் இருக்கின்றன சில பெயர்கள் கோமான்களுக்கு சில பெயர்கள் சீமாட்டிகளுக்கு. அவையும் அன்றாட த்தன்மை கொண்ட உருப்படியான பெயர்கள்தான். ஆனால், ஒரு பூனைக்கு குறிப்பிட்ட ஒரு பெயர் வேண்டுமென்று நான் உங்களுக்குச் சொல்கிறேன் அந்தப் பெயர் விசித்திரமாகவும், மேலதிகமாக கவுரவத்துக்குரியதாகவும் இருக்க வேண்டும். அப்படியில்லையெனில் அதனது வாலை எப்படி நெட்டுக்குத்தாக வைத்திருக்க முடியும் அல்லது தனது மீசைகளை எப்படி விரிக்கவ...

பூனைச் சதுக்கம் கவிதைகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன் உதிர்ந்த கொன்றைப் பூக்களுக்கு அடியில் தெரு நிசப்தத்துடன் இருப்பதைப் பார்த்தபடி காலை நடைபயிற்சிக்குச் சென்றபோது தகரக் குப்பைத் தொட்டிக்கு அருகே முளைத்தது போல வெறித்துக் கொண்டிருந்தது சாம்பல் நிறப் பூனையொன்றின் துண்டிக்கப்பட்ட தலை. எல்லாம் திடுக்கிட்டு அதிர திரும்பப் பார்க்காமல் நடந்தேன் வலதுகை தூக்கி இருக்கிறதாவென்று தொட்டுப் பார்த்தேன் வெட்டப்பட்ட என் கழுத்து தெரு மண்ணில் நரநரக்கிறது அகப்பட்ட பூனையின் சீற்றச் சீறல்கள் என்னைத் துரத்தத் தொடங்கியது உடல் துவங்கி மீசைரோமம் வரை ரூபம் பெருக்கிக் காட்டும் ஆகிருதியும் ஆவேச மியாவ்களும் என்னைச் சிலிர்ப்பித்தது சாலையின் குறுக்கே மறித்தாரோ காம்பவுண்ட் சுவரில் பிடித்தாரோ கணிப்பொறி திரையிலிருந்து உந்துதல் அடைந்தாரோ கறிவெட்டும் பலகையில் அரிந்தது போல் நேர்த்தியாய் வெட்டியவரின் சாகசமும் சேர்த்து என்னை உலுக்கியது வெட்டப்பட்ட பூனையின் தனிமை அவனது தனிமை பூனையின் இருட்டு அவனின் இருட்டு பூனையின் வீரம் அவனின் வீரம் அனைத்தும் இந்தக் கிரகத்தில் நடந்த ஆதிக்கொலை...

ஆலவாயை வரையும் ஜயபாஸ்கரன்

ஷங்கர்ராமசுப்ரமணியன் பழைய பொருட்களுக்கு     வேகமாக விடைகொடுக்கும் காலம் இது. அன்றாட வாழ்க்கையில் பழைய பொருட்கள் , புழக்கத்திலிருந்து தொடர்ந்து காணாமல் போகும் நிலையில் , அதே பொருட்கள் அருங்காட்சிகளாக மாறி மீண்டும் வருகை புரிகின்றன. அப்போது அவை உபரி மதிப்பாக மாறி , படிப்படியாக மனிதக் கைகளின் தீண்டல் இல்லாமல் போய்   கண்ணாடி பேழைகளுக்குள்   தூசிபடர்ந்து அபூர்வத்தின் அந்தஸ்தை அடைந்துவிடுகின்றன. இந்த அபூர்வ அந்தஸ்தை அடைவதற்குப் பொருட்கள் தொடர்ந்து பழமையின் அடையாளம் ஆகி , அவை நம் அன்றாட வாழ்விலிருந்தும்     விரைவாக காணாமல் போகவேண்டியுள்ளது. இப்படித்தான்   பண்பாடுகள் மற்றும் மரபுகளையும் , அபூர்வ அருங்காட்சியகப் பொருளாக நாம் மாற்றிவிட்டோம். என் தாய் மொழியிலேயே , ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட ஒரு கவிதையை வாசித்து அர்த்தம் காண்பதற்குக் கூட பயிற்சி தேவையாக உள்ளது. இப்படித்தான் பல நூற்றாண்டுகளாக பல்லாயிரம் மனிதர்கள் கூட்டாக சேர்ந்து புழங்கிய மொழி , வாழ்க்கை , கொண்டாட்டம் , கதை , சமயம் , பொருள் ஆகியவை சார்ந்த அறிவு மற்றும் பண்பாட்டு   மரப...

வந்தனம் வந்தனம் வந்தனம்

முந்தைய தினத்தின் குப்பைகள் கூட்டப்படும் சத்தம் மட்டுமே கேட்கும் காலையின் ஆளற்ற பேருந்து நிலையத்தில் தூசிக்கோளமாய் புலப்படத் தொடங்கும் ஒளியே உனக்கு வந்தனம் மேலாடைக்குள்ளும் உள்ளாடைக்குள்ளும் அடங்காமல் அலை போல எழுந்து பெருகும் யுவதியின் தடந்தோள் முலைகளை ஒளிரவைக்கும் தூய்மையான சூரியனே உனக்கு வந்தனம் சற்று முன்னர் சமுத்திரத்தில் உயிர்த்து இப்போது கருத்த முதியவளின் எடைத்தராசில் துடிப்பு நீங்கி துயிலும் மீன்களின் மீது ஈக்கள் போலப் படரும் கதிரே உனக்கு வந்தனம் விளையாடுபவர்கள் ஆடாதவர்கள் காலை நடையாளர்கள் வேடிக்கை பார்க்க குந்தியிருப்பவர்கள் என மைதானம் நிரம்பி இருக்கிறது. சிதறும் கூக்குரல்களின் நடுவே அவன் எப்போது இறந்தான் இன்னும் யார் பார்வைக்கும் அறியவராத அவன் சடலத்தின் மீது ஏறத்தொடங்கியிருக்கும் நோயுற்ற வெயில் நாயே உனக்கு வந்தனம்.