Skip to main content

Posts

மோதலுக்கு முன்பே வெற்றி

எண்ணங்கள் மற்றும் உணர்வுகளிலிருந்து பரிபூர்ணமாக விடுதலையான ஆன்மாவுக்குள் புலிக்குக் கூட இடமில்லை அதன் உக்கிரமான நகங்களுக்கும் . மலைகள் மேலிருக்கும் பைன் மரங்கள் பள்ளத்தாக்கின் ஓக் மரங்களை அதே தென்றல் தான் கடக்கிறது ஆனால் அவை ஏன் வேறு வேறு ஸ்வரங்களைத் தருகின்றன எண்ணம் இல்லை , பிரதிபலித்தல் இல்லை முழுமையான வெறுமை ஆனாலும் அங்கே எதுவோ அதன்கதியில் நகர்கிறது . கண்கள் அதைப் பார்க்கின்றன ஆனால் கைகளால் அள்ள முடியாது - ஏரியில் நிலவு . மேகங்களும் பனிப்புகையும் நடுவானில் நிகழும் உருமாற்றங்கள் அவற்றுக்கு மேலே சூரியனும் நிலவும் நித்தியத்தில் சுடர்கின்றன . தன்னைப் பற்றி சிந்தை இல்லாதவர் எவரோ மனமின்மையின் பெரும் பாரம்பரியத்தில் உறைபவர் எவரோ அவர்தான் மோதலுக்கு முன்னரே வெற்றி பெறுபவர் . ( சண்டைக் கலை நிபுணர் ப்ரூஸ் லீ எழுதிய ‘தாவோ டூ ஜீத் குனே டூ’ நூலில் இடம்பெறும் பெயர் தெரியாத குருவின் கவிதை இது)

சிமெண்ட் நிறக் காரில் வருபவர்கள்

அந்த மழைக்கால ஓடை இப்போது நீர் வற்றியிருக்கிறது சென்ற வருட மழைக்குப் பின் தினம்தோறும் காலையில் நான்கு யுவதில் அங்கே படகு செலுத்த வருவார்கள் பேருந்தில் பாலம் கடக்கும் என்னை அவர்களுக்குத் தெரியாது அவர்கள் சிமெண்ட் நிறக் காரில் வருவார்கள் அந்தக் கார் மரத்தடி நிழலில் இளைப்பாறும் காட்சி அலாதியானது மழைக்கால ஓடையில் நீர்குறைய அவர்கள் அங்கே வருவதில்லை படகு தனியே நின்று கொண்டிருக்கிறது கோடை முடிவடையும் அறிகுறிகள் ஆரம்பமாகிவிட்டன இன்னும் சில தினங்களில் மழைபெய்யக் கூடும் அவர்கள் சூரியன் வரும்போதே குதிரைவால் சடையுடன் ஓடைக்குப் படகு செலுத்த வந்துவிடுவர் படகு இப்போது தனியே நின்று கொண்டிருக்கிறது. 

எரிக்காத வெளிச்சத்தின் கவிதைகள்

கைவிளக்கைத் தொலையவிட்டும் , அவ்வப்போது கைவிளக்கின் எண்ணெய் தீரும்படியாகவும் விதிக்கப்பட்ட கவிஞன் யுகம் யுகமாக இருட்டில் பயணித்துக் கொண்டிருக்கிறான் . சென்ற நூற்றாண்டின் ஆரம்பம் வரை அவன் தேடிய வெளிச்சம் கடவுள் . அவன் வெளிச்சத்தில் பார்ப்பது மட்டுமல்ல இருட்டில் பார்த்த பொருட்கள் , இயற்கையும் சேர்ந்தே அவனது கவிதைகளுக்கு எழில் சேர்க்கின்றன . கவிஞன் வாழ்ந்த காலத்தின் கோலங்கள் , புழங்குபொருட்களை கவிதைகளில் மின்னவைப்பது என்பது அவனது கவித்துவம் அடைந்த ஊட்டச்சத்தைப் பொறுத்தது . நெசவாளியும் ஞானியும் தரிசியும் கவிஞனுமான கபீரின் கரங்கள் பட்டு கடவுள் ராமன் இப்படித்தான் பொன்னாகிறான் .   “ விவேகம் சொல்கிறது நான் ஒன்றுமேயில்லை . நேசமோ நான் எல்லாம் என்கிறது . இந்த இரண்டு உணர்வுக்கும் நடுவில் என் வாழ்க்கை பாய்ந்து கொண்டிருக்கிறது ” என்கிறார் அத்வைத ஞானியான நிசர்கதத்த மகராஜ் . “ இரண்டு சட்டைப் பைகளில் ஒரு பையில் நானே அனைத்தும் என்று ஒரு தாளில் எழுதிவைத்துக் கொள் . இன்னொரு பையில் நான் தூசியிலும் தூசி என்...

ஒன்றையும் அறிய முடியாது

மார்டின் பட்லர் ( போர்ச்சுகீசிய நாட்டில் வசிக்கும் மார்டின் பட்லர், சென்ற நூற்றாண்டைச் சேர்ந்த ரஷ்ய மெய்ஞானியான குர்ட்ஜிப் அவர்களின் நேரடி மாணவியான ரீனா ஹேண்ட்சின் உதவியுடன் ஆன்மப் பயிற்சிகளில் பல்லாண்டு காலம் ஈடுபட்டவர். மனித நிலைமைகள் பற்றிய ஆழமான புரிதலுக்கு இவர் வருவதற்கு ஸ்பினோஷா போன்ற தத்துவவாதிகளையும் முறையாகக் கற்றிருக்கிறார். martinbutler.eu   என்ற இணையத்தளத்தில் கட்டுரைகளையும் வீடியோக்களையும் தொடர்ந்து இட்டுவருகிறார். என் காலத்தையும் என்னைச் சுற்றியுள்ள நிலைமைகளையும் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சூழ்நிலைகளுக்குள் எனது விழைவுகள், ஆசைகள், வலிகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்வதற்கும், எனக்கு வழங்கப்பட்டுள்ள வளங்களினூடாக நிறைவாகவும் நீதியாகவும் இருப்பதற்கும் மார்டின் பட்லரின் எழுத்துகள் உதவிகரமாக இருக்கின்றன. அவரது எழுத்துகள் உரிமைத்துறப்பை அறிவித்திருப்பதால் எனக்குப் பிடித்தவற்றை இங்கே மொழிபெயர்த்து வெளியிடுகிறேன். இங்கே தொடர்ந்து அது வெளியாகும். தன்னில் மட்டுமே வேலை சாத்தியம் என்று நம்புபவர்கள் அவரது எழுத்துகளைத் தொடர்ந்து வாசிக்கலாம். மார்டின் பட்லர் என்னிடம் ஏற்படு...

இகம் பரம் வேண்டும் உடல்

தான் எழுதிய படைப்புகள் காரணமாக சீன அரசால் வேட்டையாடப்பட்டு தற்போது லண்டனில் வசிக்கும் 65 வயது எழுத்தாளர் மா ஜியானின் முதல் சிறுகதைத் தொகுப்பு இது. ஓவியக் கலைஞருமான மா ஜியானின் ஓவியங்கள், 1983-ம் ஆண்டில் ‘ஆன்மிக மாசுபாடு’-ஐ ஏற்படுத்துவதாகக் குற்றம் சாட்டப்பட்டு கிழித்தெறியப்பட்டு அழிக்கப்பட்டதோடு சீன அரசால் கைதும் செய்யப்பட்டார். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவரது தனிப்பட்ட வாழ்விலும் புயல் வீசியது. விவாகரத்து பெற்ற அவரது மனைவி, மா ஜியானை தமது மகளைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. கலைஞனாகவும் தனிப்பட்ட வகையிலும் நேர்ந்த துயரங்களாலும் தன் எதிர்காலம் குறித்த கேள்விகளாலும் துளைக்கப்பட்டு பதில் தேடி மூன்றாண்டுகள் சீனா முழுவதும் கால்நடைப் பயணத்தை மேற்கொண்டார். பௌத்த சமயத்தைத் தழுவினார். திபெத்திலும் சிறிது காலம் வசித்தார். தனது திபெத்திய அனுபவங்களையொட்டி ஆங்கிலத்தில் எழுதிய கதைகளின் சிறிய தொகுப்பே ‘நாக்கை நீட்டு’. உலகின் கூரை என்று சொல்வதற்குத் தகுந்த உயரத்தில் காற்றழுத்தம் குறைந்து, கடினமான தட்பவெப்பச் சூழ்நிலைகளுக்குள் அகமும் புறமுமாக அதீதச் சூழலுக்குள் அலையும் மனி...