இழப்பின் மொழியாக எஞ்சியிருக்கும் ஒரே மொழி அரபிதான் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டது வேறுமொழியில் அரபியில் அல்ல. மூதாதைகளே எனக்காக ஒரு காலி மனையை விட்டுச் சென்றிருக்கிறீர்கள் குடும்பத்து மையவாடியில் நான் ஏன் உங்கள் கண்களைப் பார்த்து பிரார்த்தனை செய்யவேண்டும் அரபியில் மஜ்னு கிழிந்துபோன உடைகளுடன் இன்னமும் தேம்புகிறான் அவனுடைய லைலாவுக்காக ஐயோ இது பாலையின் பைத்தியம் கிறுக்கான அவனது அரபியில் யார் இஸ்மயிலை செவிமடுக்கிறார்கள்? இப்போதும் அவன் உரத்து வேண்டுகிறான் ஆபிரகாமே, வாள்களை கீழே எறி ஒரு துதி படி அரபியில் நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில் முகமது தார்விஷ் உலகத்துக்கு எழுதுகிறார் நீங்கள் எல்லோரும் நடுவே நழுவிவிடுவீர்கள் ஓடி மறையும் சொற்கள் கொண்ட அரபியில் நெருப்பு மனிதர்களும் நெருப்பு கற்களும் தோன்றுமென்று குரான் தீர்க்கதரிசனம் உரைத்தது. ஆம் இது இப்போது நடந்துவிட்டது இதுவும் சொல்லப்பட்டுவிட்டது அரபியில். லோர்க்கா இறந்தபோது பால்கனிகளை அவர்கள் திறந்தபடி விட்டார்கள் லோர்க்காவின் கஸீடா பாடல்களை அடிவானத்தில் முடிச்சுகளாகப் பின்னினர் அரபியில். டியிர்யாசினில் இருந்த வீடுகள் இன்று அடர்ந்த காடுகள் அந்தக் கிராமம் அழிக்கப்பட்டது அங்கே சுவடற்றுப் போனது அரபி. ஆமாம் அமிச்சாய், அழகிய பெண்களின் ஆடைகளை நானும் பார்த்தேன் அது மட்டும் அல்ல எல்லாவற்றையும் பார்த்தேன் நீ பார்த்தது போல் இறப்பில் எபிரேயத்தில் அரபியிலும் அவர்கள் என்னைக் கேட்கிறார்கள்: ஷாகித் என்பதன் அர்த்தம் என்ன? சொல்கிறேன் கேளுங்கள்: பாரசீகத்தில் 'நேசத்துக்குரியது' 'சாட்சி' அரபியில்.
கரோனா என்னும் இயற்கைப் பெருந்தொற்று, இந்தியா போன்ற வளர்முக சமூகத்தில், அடிமட்டத்தில் உள்ள மக்களின் ஏற்கெனவேயுள்ள துயரங்களைக் கூட்டி, ஒரு இயற்கைப் பேரிடர்கூடக் கடைசியில் ஏழைகளது தலையிலேயே பிரமாண்டமான சுமைகளை இறக்குகிறது என்பதை மீண்டும் நிரூபித்தது. முகமூடி அணிவதையும், மனிதர்களைத் தொடாத இடைவெளியையும், அனுமதிக்கப்பட்ட தீண்டாமையையும் பணக்காரர்களும் உயர்சாதியினரும் தான் பெருந்தொற்றுக் காலத்தைச் சாதகமாக்கி இயற்கையானதாக, சௌகரியமானதாக மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது கொடுங்கோன்மையை, இந்தப் பெருந்தொற்றின் முகமூடியை அணிந்தே வேறு வேறு வகைகளில் குடிமக்கள் மீது இறக்கியது. இந்தப் பெருந்தொற்று நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளர்களை வெளியேற்றி பல தொழில்துறைகளில் பத்திரிகை துறையும் ஒன்று. நாட்டில் நடக்கும் அவலங்கள், அரசியல்வாதிகளின் தகிடுதித்தங்களை எல்லாம் உரத்துப் பேசும் ஊடகங்களும், எழுதும் பத்திரிகையாளர்களுக்கும் தங்கள் உரிமைகளைப் பேசுவதற்கு இன்னமும் சரியான அமைப்போ, அவர்களது உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்களோ வலுவாக இல்லாத நிலையில், இந்தியா முழுவதும் தி இந
Comments