Skip to main content

இருப்பின் சித்தார் – பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்


கதவுகள், ஜன்னல்கள், கூரைகள்

மௌனத்தின் சுமைதாளாமல்

நொறுங்கிவிட்டன.

வலியின் நீரோட்டம் வானிலிருந்து வழிகிறது.

துயரம், பிரிவாற்றாமையால் நிரம்பி

நிலவொளி கூறும் கதை

நெடுஞ்சாலைகளின் புழுதியில்

உழன்றுள்ளது.

படுக்கையறைகளில் மங்கிய இருள்.

பலவீனமான சுருதியில் ஒலிக்கும்

இருப்பின் சித்தார்

மென்மையான தொனிகளில்

இரங்கற்பாக்களைப் பாடுகிறது.

Comments

Gorky noel said…
இருப்பின் சித்தார்✨✨✨