தக்காளிகள் தப்பி
தரையில் உருள்கின்றன.
தக்காளிகள் நழுவி
விழுந்துவிடுவது
இயல்பாக நடக்கிறது.
தக்காளிகள்
கைநழுவிப் போய்விடுகின்றன.
தக்காளிகள்
உருண்டு
உருண்டு
கண்மறைவாகப் போய்க் கொண்டிருக்கின்றன.
நழுவித் தொலைந்துவிடாமல்
தக்காளியைப்
பிடிக்க
தக்காளிக்கு முன்னால்
நான்
விழுந்து
தொலைக்க வேண்டியிருக்கிறது.
தக்காளிக்கு
தான் விழக்கூடாதென்ற
பொறுப்பும் கிடையாது.
தக்காளி
நீ உடைந்துவிடக் கூடாது.
தக்காளி
நீ நொறுங்கிவிடக் கூடாது.
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments