Skip to main content

Posts

ரத்தம் குடிப்பார்கள்

போக்குவரத்து நெருக்கடியும் பரபரப்பும் மிக்க  மாநகரமாக  சென்னை ஒரு தோற்றத்தில் தெரிகிறது . ஆனால் , பரபரப்புக்கு அருகிலும் அமைதியும் ஆசுவாசமும் கொண்ட நிழலிடங்களும் இங்கே உண்டு . வேளச்சேரியிலிருந்து கடற்கரை நிலையம் வரை செல்லும் ரயில் நிலையப் பாதையும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களும் இதற்கு உதாரணம் . ஐம்பது வருடங்களுக்குப் பின்னரும் வரவிருக்கும் பயணிகளின் எண்ணிக்கையை உத்தேசித்து கட்டப்பட்ட பிரமாண்ட ரயில் நிலையங்களும் அதைச் சுற்றி ஏகாந்தமாக இருக்கும் காலியிடங்களும் குறுக்குவெட்டாகச் சென்னையைப் பறவைக் கோணத்திலிருந்து பார்க்கும் சவுகரியமும் கொண்ட தடம் அது . அப்படித்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை பெருங்குடி ரயில் நிலையமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் இருந்தன .  பெருங்குடி ரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி ரயில் நிலையத்தை இணைக்கும் சாலை ஒரு நிலை வரை போடப்பட்டு நடுவில் உள்ள ஏரியால் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. காலை நடைப் பயிற்சியாளர்கள், மாலை நடை செல்லும் வயோதிகர்கள், உடன் வரும் ராஜபாளையம் நாய்கள், அரிதாக வரும் காதலர்கள், கோடைக் காலத்தில் வீல் ஸ்கேட்டிங்...

பா. வெங்கடேசனின் வாராணசி

முதல் செல்ஃபி புள்ள   அஸ்வமேத யாகத்துக்கு அரைக்குதிரையாவது வேண்டும் தேச வரலாறு, கலாச்சாரம், பொருள்சார் பண்பாடுகள், நாகரிகங்களின் உரையாடல், அரசியல் என்ற அகண்ட திரையின் பின்னணியில் தனிமனிதர்களை வைத்து, வாசகனின் முயற்சியையும் வேண்டும் எழுத்தைக் கொண்ட தனித்துவமான கதைசொல்லி பா.வெங்கடேசன். தமிழில் மட்டுமல்ல; சர்வதேச இலக்கியப் பின்னணியிலும் அழுத்தமாக வைக்கப்பட்ட தமிழ்ச்சுவடாக வெங்கடேசனின் முந்தைய நாவல்களான ‘தாண்டவராயன் கதை’, ‘பாகீரதியின் மதியம்’ ஆகியவை விமர்சகர்களால் கொண்டாடப்பட்டன. மூதறிஞர் ராஜாஜியின் ஊரான ஓசூரைக் களனாகக் கொண்ட மூன்று சகோதரிகளின் குடும்பத்துக் கதையே வெங்கடேசனின் மூன்றாவது நாவலான ‘வாராணசி’யின் ஓரடுக்காகும். இந்த நூற்றாண்டுக்கு முந்தைய அந்த அடுக்கில் பெண்களின் பகல் கனவுகளும், இன்னொரு அடுக்கில் அதே காலகட்டத்திய ஆண்களின் ரகசிய வடிகாலாக இருந்த சரசப் புத்தகக் கதைகளில் இடம்பெறும் பாலியல் சாகசக் கதையின் உள்ளடக்கமும் ஊடிழையாகப் புனையப்பட்டுள்ளது. வாராணசி என்ற அதீதத்தின் நிலத்தில் நிர்வாணம் எனும் அதீதத்தை வைத்து  பா.வெங்கடேசன் எடுத்திருக்கும் புகைப்படமே ‘வாராணசி...

தாவர மகளே

சிப்பி விரிவது போல் என் முத்தத்துக்கு உன் இதழ்களைப் பகிர்கிறாய் உன் குழந்தைமை உன் பிராயம் இரண்டுமே ருசிக்கின்றது உன் வாய் நீர் பருகும் போழ்து பருவம் உடலில் மின்னத் தொடங்கியிருக்கும் தாவர மகளே உனக்கென் காமம் சமர்ப்பணம்

பயம் பயம் பயம்

நிலவு ஒளிரும் ஒரு இரவில் யாருமற்ற சாலையில் முல்லா நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவர் குறட்டையொலியைக் காலடிக்கு மிக அருகில் கேட்டார். உடனடியாக அவரை பயம் பீடிக்க, ஓடத் தொடங்கினார். தரையில் குழிதோண்டி தவத்தில் இருந்த ஒரு துறவியின் மீது கால்பட்டு தடுக்கிவிழுந்தார். ‘நீங்கள் யார்?’ என்று முல்லா நாக்கு குளரக் கேட்டார். ‘நான் ஒரு துறவி, இதுதான் என்னுடைய தவம் செய்யும் இடம்.’ ‘ அப்படியா, உங்கள் குறட்டையைக் கண்டுதான் அலறிப் போனேன். உங்கள் இடத்தை எனக்கும் பகிருங்கள். என்னால் இனிமேலும் பயணத்தைத் தொடரமுடியாது. பயமாக இருக்கிறது.’ என்றார் முல்லா. துறவி, முல்லாவிடம் தனது போர்வையின் மறுபகுதியைக் கொடுத்து அதைப் போர்த்தி உறங்குமாறு சொன்னார். நஸ்ரூதீன் உறங்கிப் போனார். அவருக்கு விழிப்பு வந்தபோது, மிகுந்த தாகமாய் இருந்தது. துறவியிடம் தனது தாகத்தைத் தெரியப்படுத்தினார். ‘இதே சாலையில் வந்த வழியிலேயே நடந்து செல். அங்கே ஒரு ஓடை வரும்.’ ‘என்னால் முடியவே முடியாது. எனக்கு பயம் போகவேயில்லை.’ என்றார் முல்லா. முல்லாவுக்குப் பதிலாகத் தானே தண்ணீரை எடுத்துவந்து உதவுவதாக துறவி எழ...

இனிப்பான தேநீர் இந்தியா வந்த கதை

அரூப் கே. சாட்டர்ஜி ஆங்கிலேயரின் முதல் தேநீர் சுவைப்பு அனுபவம் மிகவும் தாமதமானது. ஆனால், சீனர்கள் 2000 ஆண்டுகளாகத் தேநீரைச் சுவைத்துவந்திருந்தனர். ஆங்கிலேயத் தினசரிதையாளர் சாமுவேல் பெப்பிஸ், 1600 செப்டம்பர் 25 அன்று, தான் எழுதிய டைரிக்குறிப்பில் ‘ச்சா’(Tcha) என்று குறிப்பிட்டு, “மருத்துவர்கள் அங்கீகரித்ததும் பிரமாதமான சுவையுள்ளதுமான சீன பானம்” என்று குறிப்பிட்டுள்ளார்.  1635-லிருந்து அரைக் கிலோ தேயிலை ஆறு முதல் பத்து பவுண்டுக்கு விற்கப்பட்டுள்ளது. அன்றைய விலைவாசியுடன் ஒப்பிடும்போது இது மிகவும் உயர்ந்த தொகை. 1662-ம் ஆண்டு இரண்டாம் சார்லஸ் மன்னர், போர்த்துக்கீசிய இளவரசி கேத்தரினை மணமுடித்த போது, ஒரு பெட்டகம் அளவுக்குத் தேயிலையையும் வரதட்சிணையாகப் பெற்றார்! அத்துடன் வருடாந்திரக் குத்தகைத் தொகையாக வெறும் பத்து பவுண்டுக்கு பாம்பே தீவையும் வரதட்சிணையாகப் பெற்றார். அந்தக் குத்தகைத் தொகை, அன்றைய இங்கிலாந்தில் அரைக் கிலோ தேயிலைக்கான விலை! போர்த்துக்கீசிய அரசவையில் மாலையில் தேநீர் பருகும் வழக்கம் கேத்தரினுக்கு இருந்தது. இங்கிலாந்தில் தனது முதல் மிடறுத் தேநீரை அவர் 1662 மே மாதம் ப...

ராணியென்று தன்னையறியாத ராணி

மலைச்சரிவிலுள்ள அந்தச் சிறுவீட்டின் வாசல்படியில் கன்னத்தில் கைபதித்து மென்சோகத்துடன் காத்திருக்கிறாள் ராணியென்று தன்னையறியாத ராணி 000 மரணம் எதுவென ராணியிடம் கேட்டேன். புலன்களின் ஜன்னல்களை ஒவ்வொன்றாகச் சாத்தி ஒளிகசியும் துளைகள் அனைத்தையும் மெழுகினால் அடைத்து கடைசியில் உன்னைச் சூழும் இருள் என்று சொல்லி அவசர அவசரமாய் நீங்கிப் போனாள். நானும் சரிதான் சரிதான் என்றேன்.

அறியாததன் மகத்துவம்

ஜே. கிருஷ்ணமூர்த்தி பனைகளுக்கு அப்பால் தூரத்தில் நிம்மதியற்ற கொடூரமான கடல்; அது அமைதியற்று, முரட்டு அலைகளோடு வலுத்த சுழிப்புடன் திகழ்ந்தது. இரவின் மௌனத்தில் அதன் ஆர்ப்பரிப்பு தூரத்திலிலுள்ள ஒரு தீவிலும் கேட்கக்கூடியதாக இருப்பதோடு அதன் ஆங்காரத்தில் ஒரு எச்சரிக்கை, அச்சுறுத்தல் இருந்தது. ஆனால் இங்கோ, பனைகளுக்கு நடுவே, ஆழ்ந்த நிழல்களும் மோனமும் இருந்தன. அன்று முழுநிலவு. கிட்டத்தட்ட பகல்போல ஒளிர்ந்தது. அனலோ கண்ணைக் கூசும் ஒளியோ இல்லை. காற்றிலாடும் பனைகள் மேல் விழும் ஒளி, மிருதுவாக எழில்மிக்கதாக இருந்தது. பனைகள் மீது விழும் நிலவொளி மட்டுமல்ல, அவற்றின் நிழல்களும், வட்டமான கிளைகளும், மின்னும் நீரும் வளமான பூமியும், எல்லாமும். பூமி, வானம், நடக்கும் மனிதன், கத்தும் தவளைகள், தூரத்து ரயிலின் சீழ்க்கையொலி என அனைத்தும் மனத்தால் அளக்க இயலாத ஒரு உயிர்ப்பொருள். மனம் என்பது அற்புதமான ஒரு கருவி; அத்தனை சிக்கலான, நுண்ணிய, எண்ணிலாத அத்தனை சாத்தியங்களையுடையதாக மனிதன் படைத்த எந்த இயந்திரமும் இல்லை. நமக்குத் தெரிவது மனத்தின் மேலோட்டமான மட்டங்களைப் பற்றி மட்டுமே; அதன் மேல் தளத்திலேயே நமது இருப்பைத்...