Skip to main content

செவ்வியல் பிரதி



நித்தியத்தை உணர்த்திய வாக்கியங்களுக்கு
திரும்பச்செல்லும் பாதை குழம்பிவிட்டது
உடன் வந்தவர்கள் இறந்து போனார்கள்
எத்தனை காதல்
எவ்வளவு முரண்கள்
எனது சொற்கள்
உனது சொற்கள்
அனைத்தின் நினைவுகளும்
கதைகளாய்ப்
பிறழ்ந்தன
நான் கொலை செய்தேன்
எந்தப் புத்தகத்தில்
அத்தனை புழுதியிலும்
பொன்போல
மின்னுகிறது
குருட்டு வன்மம்
நான் படிகளாகிறேன்
வானம் நோக்கும்
தனிமையின் தூண்களாகிறேன்
ஒரு செவ்வியல் பிரதியாய்
மெதுவாய் உருமாறிக்கொண்டிருக்கிறேன்.

Comments