நான்
எனது நாய்க்குட்டி
மரங்கள் சூழ்ந்த நிழற்சாலை
ஒரு காலிமனை
எங்களைக் கடக்கும் காரிலிருந்து
ஒரு ஜோடிக் கண்கள்
எம்மைக் குத்திப் பதித்துக் கடக்கும்போது
அங்கே வனத்தின் மர்மம்
ஒன்று முளைத்துவிடுகிறது
நான்
எனது நாய்க்குட்டி
மரங்கள் சூழ்ந்த நிழற்சாலை
ஒரு காலிமனை
எங்களைக் கடக்கும் காரிலிருந்து
ஒரு ஜோடிக் கண்கள்
எம்மைக் குத்திப் பதித்துக் கடக்கும்போது
குற்றத்தின் கைப்பிடித்து
குற்றத்தை இழுக்கும் கதாபாத்திரங்கள் ஆகிறோம்
நான்
எனது நாய்க்குட்டி
மரங்கள் சூழ்ந்த நிழற்சாலை
எங்களைக் கடக்கும் காரிலிருந்து
ஒரு ஜோடிக் கண்கள்
எம்மைக் குத்திப் பதித்துக் கடக்கும்போது
அதற்கும் அடியில் ஓர் அமைதியில் எட்டெடுத்து வைக்கிறோம்.
நான்
எனது நாய்க்குட்டி
மரங்கள் சூழ்ந்த நிழற்சாலை
எங்களைக் கடக்கும் காரிலிருந்து
ஒரு ஜோடிக் கண்கள்
எம்மைக் குத்திப் பதித்துக் கடக்கும்போது
ஒரு கொலைக்கு முன்னோ
பின்னோ நாங்கள் தெரியாமல்
காற்றில் தாவுகிறோம்
நான்
எனது நாய்க்குட்டி
மரங்கள் சூழ்ந்த நிழற்சாலை
ஒரு காலிமனை
எங்களைக் கடக்கும் காரிலிருந்து
ஒரு ஜோடிக் கண்கள்
எம்மைக் குத்திப் பதித்துக் கடக்கும்போது
பரிபாலிக்க ஆரம்பிக்கிறது
பயத்தின் திருஆட்சி.
Comments