வெயிலில் சற்றே வண்ணம் வெளிறி காகிதப் பூ விழுந்துகொண்டிருந்தது. சாலையை நோக்கி விழுந்துகொண்டேயிருந்த காகிதப் பூ ரோஸ் வண்ணச் சிட்டாக விருட்டென்று அந்தரத்தில் உருமாறி என் தலையை உரசிக்கொண்டு பறந்து போனதை நான் சொன்னால் நீங்கள் நம்பவா போகிறீர்கள். (நன்றி: அகழ் இணைய இதழ்)