வெயிலில் சற்றே வண்ணம் வெளிறி
காகிதப் பூ
விழுந்துகொண்டிருந்தது.
சாலையை நோக்கி
விழுந்துகொண்டேயிருந்த காகிதப் பூ
ரோஸ் வண்ணச் சிட்டாக
விருட்டென்று அந்தரத்தில் உருமாறி
என் தலையை உரசிக்கொண்டு
பறந்து போனதை
நான் சொன்னால்
நீங்கள் நம்பவா போகிறீர்கள்.
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments