Skip to main content

போகன்வில்லா


வெயிலில் சற்றே வண்ணம் வெளிறி

காகிதப் பூ

விழுந்துகொண்டிருந்தது.

சாலையை நோக்கி

விழுந்துகொண்டேயிருந்த காகிதப் பூ

ரோஸ் வண்ணச் சிட்டாக

விருட்டென்று அந்தரத்தில் உருமாறி

என் தலையை உரசிக்கொண்டு

பறந்து போனதை

நான் சொன்னால்

நீங்கள் நம்பவா போகிறீர்கள்.


(நன்றி: அகழ் இணைய இதழ்)

Comments