Skip to main content

அவளையும் அவளையும் ஈன்ற அந்தச் சிறுமரம்



மரத்தினடியில்

தோன்றினார்கள் அவர்கள்

அவன் முகம் தொட்டு

அவள் ஆகியபடியிருந்தாள்

அவள் விரல்களில் மோதி மோதி

அவன் ஆகிக்கொண்டிருந்தான்

வளையல்கள் தொங்கட்டான்கள்

அலைபேசிகள்

எல்லாம் அந்த மரத்தடியில்

வரிக்குதிரைகளின் வரிகள் 

 மேய்ந்து கொண்டிருந்தன

அடுத்த சுற்று நடையில்

அவள் அந்த இடத்தை விட்டு

முதுகுகாட்டி

நீங்கிப் போனதைப் பார்த்தேன்

குனிந்து அலைபேசியை வெறித்துக்

 கொண்டிருக்கும்

அவனை

பார்த்துக் கொண்டிருக்கிறது

அவளையும் அவளையும் ஈன்ற

அந்தச் சிறுமரம்

Comments

Ranjani basu said…
அருமை..
// வரிக்குதிரைகளாக மேய்ந்து கொண்டிருந்தன// அழகு