Skip to main content

வீடென்று எதனை அழைப்பீர்


வீடென்று எதனை
யாரை அழைப்பது
ப்ரவுனி
வீடென்ற ஒன்று உண்டென்றே நம்புகிறேன்
என்று எழுதிய கவிஞனை
நம்பியவன்தான் நானும் ப்ரவுனி

வீடு
தெரு
என்ற பேதம்
எனக்கு இப்போது குழம்பத் தொடங்கியுள்ளது
ப்ரவுனி

இன்று முதல் உனக்கு வாசலில் உணவிடுகிறேன்
நீ முதலில் தெருவுக்குச் செல்லம் ஆகிவிடு
உன்னைத் தொடர்ந்து
நானும் ஆகிறேன்.

Comments