Skip to main content

அதிகாலை நான்கு மணி, வேங்கை - ஆஹா சாகித் அலி



இந்தப் பாழில் பதிக்க 
எதுவோ ஒன்று காத்திருக்கிறது 
ரோமம் மூடிய 
எதுவோ ஒன்று 
வெளியே 
ஜனவரிப் பனியில் 
இன்னமும் உறங்காமல் விழித்திருக்கிறது.


நான் ஜன்னலைத் திறக்கிறேன்
பத்தாயிரம் மைல்களுக்கப்பால் 
குமாவுனின் மலைச்சரிவுகளில்
ஆட்கொல்லிக்கு அஞ்சி 
குடியானவர்கள் வீட்டுக்குள் பூட்டியிருக்க
அவர்களின் குடிசைகளோ 
உறைபனிச் சாந்தால் சுற்றிப் போர்த்தப்பட்டுள்ளது.


எனக்கு முன்னால் மேஜையில் 
காற்று பக்கங்களைப் படபடக்க வைக்கிறது.

எதுவோ ஒன்று அசையத் தொடங்குகிறது
கிராமத்தினர் மறுபடியும் 
உயிர்ப்புக்குத் திரும்புகின்றனர்
சூரியனோ அவர்களது குடிசைகளுக்கு 
திரும்பவும் ஆடை அணிகளைப் பூட்டுகிறது.

கழுவத்தக்க வைகறையின் ஊதாக்களை 
அது கழுவுகிறது.

புத்தகப் பக்கத்துக்கூடாக 
எதுவோ ஒன்று அலைந்துலவுகிறது.


Comments