Skip to main content

ஓர் அழைப்பு - ஆஹா சாகித் அலி


நான் கண்களை மூடுகிறேன். அது என்னை நீங்கவில்லை
காஷ்மீரின் குளிர் நிலவு
என் வீட்டை
உடைத்து நுழைந்து
என் பெற்றோரின் காதலைத் திருடுகிறது.


நான் எனது கைகளைத் திறந்து பார்க்கிறேன்:
வெறுங்கை, வெறுங்கை. இந்த அழுகையோ அந்நியமானது.


“நீ எப்போது வீட்டுக்கு வருவாய்?”
அப்பா கேட்கிறார், திரும்பவும் கேட்கிறார்.
சமுத்திரம் தொலைபேசி வடங்களுக்குள் இடம்பெயர்கிறது.


“நீங்கள் எல்லாரும் நிம்மதியாக இருக்கிறீர்களா?”
நான் கத்துகிறேன்
தொடர்பு மரித்துவிட்டது.


தண்ணீர் தொலைபேசி வடங்களிலிருந்து நீங்கிச் செல்கிறது.
கடல் அமைதியாக உள்ளது
அதன் மேலோ
குளிர்ந்த காஷ்மீரின் குளிர் நிலவு.   

Comments