Skip to main content

Posts

Showing posts from June, 2025

ஓர் இரவு

அகங்கை கொண்டு மூணுபிடி புறங்கை கொண்டு மூணுபிடி அருணாசலத்தாச்சி பாடத் தொடங்க காவேரிப் பெரியம்மாவின் மடியில் உறங்கிக்கொண்டிருந்த நான் திடுமென்று விழித்தேன். கண் திறந்துபார்த்தால் கண் அவிந்துபோய்விடுமென்று சொல்லித்தான் அம்மா அங்கே அழைத்துவந்து படுக்க வைத்திருந்தாள். அப்பாவோ இரவுப்பணிக்குப் போயிருந்தார். மார்புக்குக் குறுக்காக சேலை ஒன்றை மட்டுமே சுற்றி கூடத்தில் அலையும் எங்கள் வளவு வீடுகளைச் சேர்ந்த அத்தைகள். அம்மா பின்கட்டிலிருந்து குளித்த தலையுடன் பாவாடையை மேலேற்றிக் கட்டிக்கொண்டு நுழைந்தாள். சில்வர் பாத்திரத்தில் வெள்ளைக் கொழுக்கட்டைகள் குழு குழுவாக அமர்ந்திருந்த பெண்களால் உருவங்களாகத் தட்டி உருட்டி அடுக்கப்பட்டன. நோஞ்சலான கிழவிகள் கிழவர்கள் கை கால் மண்டையோடு பாடை அகல் விளக்கு எனக்குத் தெரிந்த உருவங்கள் தெரியாத உருவங்களும் கொழுக்கட்டைகளாக அவரவர் சட்டிகளில் விழுந்துகொண்டிருந்தன. சூடன், சாம்பிராணி புகையில் பளீர் குழல் விளக்கு வெளிச்சத்தில் ஆவிகளாய் என் அம்மாவும் அத்தைகளும் மறைந்து இருந்து உருக்கள் மாறித் தோன்றிய அந்த ஔவையார் நோன்பு நடுநிசியை நிஜம்தானென்று இன்று ருசுப்படுத்த அருணாசலத்தாச்ச...

கல் ஆந்தை

மகா கருணை மகா அமைதி மகா பரிவு பங்களா வீட்டின் மேல்மாடத்தில் புத்தராய் மாறி வெறிக்கும் கல் ஆந்தை. (நன்றி: அகழ் இணைய இதழ்)

நான்ஸி

ஒருகை குறைய துரியோத்தின் இளம் மனைவி நான்ஸி முதல்முறையாக அவன் நண்பர்களுடன் ரம்மி ஆட அமர்கிறாள் இதுவரை கேட்காத உற்சாகச் சிரிப்பொலிகளை மூன்று மாதங்களில் இடிக்கப்படவுள்ள பழைய அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு கேட்கத் தொடங்குகிறது. ராஜா ராணி அதிகம் சேர்ந்தாலும் தரித்திரம்தான் திவாகர் உதடு பிதுக்குகிறான். ஜோக்கர் இருப்பவன் இல்லாதவன் இரண்டு பேர் முகத்திலும் வித்தியாசமே காணமுடிவதில்லை நள்ளிரவிலும் புழக்கமற்ற பால்கனிகளில் தங்கியிருக்கும் புறாக்களின் முனகல் நிற்பதில்லை சலிக்கிறான் துரியோத். ஒழுங்கா அடுக்கத் தெரியாதவனும் நான்காவது ரவுண்டிலேயே ரம்மியில் ஜெயிக்கிறான் ரம்மியைப் பொறுத்தவரை உள்ளேயும் வெளியேயும் ஜோக்கர்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கைமாறுகிறார்கள் சீட்டுகளை நெஞ்சோடு மறைத்து சிரத்தையோடு விளையாடுபவனும் ஜெயிக்கிறான் எல்லாரும் பார்க்க சீட்டுகளை முறையற்று விரித்து விளையாடுபவனும் ஜெயிக்கிறான் பரஸ்பர நிதி ஆலோசகன் தர்மராஜின் ஆரூடம். ஜோக்கராகவே இருந்தாலும் தேவையில்லாத நேரத்தில் கூடுதலாக ஏறக்கூடாது ராஜாவும் ராணியும் அமைச்சரும் படம்கொண்ட பாம்புகள் ஜோக்கரோ சீட்டின் எல்லையைத் தாண்டி நெளிபவன் புறாக்கள் ...

மிஷிமாவின் சௌந்தர்ய கிளிகள்

ராஜஸ்தானின் பளீர் வெயில், நடுமுற்றத்தில் பட்டு ஒளிரும் வகையில் அமைக்கப்பட்ட ஜோத்பூரின் தங்கும் விடுதி அது. வெளிநாட்டு ஓரினப் பாலுறவாளர்கள் தேடித் தங்கும் அந்த விடுதியின் உணவுக்கூட மூலை அலமாரியில்தான், யாரோ விட்டுச்சென்ற, யூகியோ மிஷிமாவின் ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ நாவலைப் பார்த்தேன். சாமுராய்களின் உடல் வலிமை, வீரம், ஆண்தன்மை மீது குழந்தைப் பருவத்திலிருந்தே கதாநாயகனுக்கு கவர்ச்சி தொடங்கி அதுதொடர்பிலான குழப்பம், பயம், இரட்டைத் தன்மை, அதை மறைப்பதற்கான பாவனை எல்லாம் அலைக்கழிக்க, ஒரு யுவதியின் காதலையும் வலியுடன் கடக்கும் இறுதி அத்தியாயத்தைப் படித்து முடித்தேன். ஊர்திரும்பிக் கொண்டிருந்த ரயில், சூரிய காந்தி வயல்களினூடாக கர்நாடக மாநிலத்தில் எங்கோ ஒரு பிரதேசத்தில் விரைந்துகொண்டிருந்தது. மிஷிமா கொடுத்த பெருமூச்சுடன், மழைக்காக மூடியிருந்த ஜன்னலைத் திறந்து வெளியை வெறித்தபோது சரட்டென்று கிளிகள் சூரியகாந்தி வயல்களிலிருந்து கூட்டமாக மேலே பறந்தன. சிறுவன் மிஷிமா அதுவரை அணிந்திருந்த முகமூடியை வலியுடன் உரித்து அகற்றியபோது உண்டான அழகு….பச்சைப்பசேல் வயலில் விருட்டென்று எழுந்து பறந்த கொக்கின் ...