நீ போகிறாய்
என்று
அவள் சொன்னாள்.
இடுகாட்டுக்குத் தூக்கிச் செல்லப்பட்ட போது.
அவன் பதிலளிக்கவில்லைதான்.
அவன் என்றும் பதிலளித்ததில்லை.
வேர்க்கடலைகளைக் கொறித்தபடி
மாலை செய்தித் தாளை மேய்ந்துகொண்டிருந்தான்.
காலை உணவில்
முட்டையின் மஞ்சள் கரு
அவனது தாடையின் ஓரத்தில்
வழிந்தது.
(நன்றி : அகழ் இணைய இதழ்)
Comments