நூற்றாண்டுத் துயரக் கசப்பின்
மதுவைப் பருகி
யாரோ ஒருவர் தூக்கி எறிந்த
காலிப்புட்டியை
தெருவில் பார்த்தேன்.
கூரிய கருங்கல் ஒன்றை
தேடிக் கண்டெடுத்து
கலிங்கென
நொறுக்கி உடைத்தேன்.
தன்
தொலியுரித்து
ஒரு
சூரியன்
மேலெழுந்தது
ரத்தமாய்ப் பூத்தது.
(நன்றி : அகழ் இணைய இதழ்)
Comments