வீட்டுத் திண்ணைக்கு முன்னால்
நிறுத்தப்பட்டிருந்த
சைக்கிளின் கைப்பிடிக் கண்ணாடி
வீட்டுக்கு
வேறொரு தோற்றத்தை
காட்டிக் கொண்டிருந்தது.
கண்ணாடிக்குள்
சத்தமோ
அழுகையோ
இல்லாமல் தெரியும்
அவர்களின் வீட்டை
சிறுவன்
ஆசையுடன்
நுழைய நுழைய
பார்த்துக் கொண்டிருந்தான்.
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments