வடிவம் கம்பீரம் குலைய
அறையப்பட்டு
வடுபட்டு
கூம்பு கோபுரங்களின் பின்னால்
தனது முகத்தை
மறைத்து நிற்கிறாள் நிலா.
மேலெழுந்து உதயமாக
அவளுக்கு அவசரமேதும் இல்லை:
அவள் கடக்கவேண்டும்
ஒரு பாலைவனத்தையும்
நொறுங்கிய குன்றுகளின் வரிசையையும்.
(நன்றி: அகழ் இணைய இதழ்)
Comments