Skip to main content

Posts

Showing posts from 2025

ஒருநாள் - நகுலன் (எழுத்து இதழ் - 1959)

   ஈசுவரஸ்மரணையிலேயே தன் ஸ்மரணையை உலகைவிட்டு சுழலாமல் வாழ்வை நடத்திவந்த பரமஹம்ஸரைச் சுற்றி சிஷ்யர்கள் வந்து போய்க் கொண்டிருந்தனர் . பிற்காலம் உலகப் பிரசித்தி பெற்ற நரேந்திரநாத தத்தர் , உலகறியாத  ஆ னால் பரமஹம்ஸருக்கு வேதாந்தங்களை உபதேசித்துவிட்டு விடை பெற்றுக்கொண்ட மகான் தோதாபுரி , உறவினனான இருதய முகர்ஜி பிரம்ம ஸமாஜிகளான கேசவசந்திர சேனர் , சாஸ்திரி சிவநாத பாபு , பிரதாப சந்திர முஜும்தார் , வைதிக ரத்தினமான கிருஷ்ண கிஷோர் சாதகர்களான கௌரங்கஸ்வாமி , நித்தியானந்தஸ்வாமி , வைத்தியரானசசாதரபண்டிதர் , கோடீச்வரரானயதுநாதமல்லீக் ,  ராணிராஸமணியின் மருமகனான மதுரபாபு இப்படியாகப் பலரும் பரமஹம்ஸரைப் பார்த்து அளவளாவ வந்து போய்க் கொண்டிருந்தனர் .  இவர்களுடன் பரமஹம்ஸர் முழுவிவகார ஞானத்துடன் பேசுவதை முதல் தடவையாகப் பார்ப்பவர்கள் அவர் உலகை நிராகரித்தவர் என்று சொன்னால் அதிசயப்படுவார்கள் . அவரவர் - யதுநாத மல்லிக்கிலிருந்து தோட்டி குஞ்சன் வரை -  அவரவர் தங்கள் கஷ்டங்களைச் சொல்லி , அவருடைய திருஷ்டாந்தக் கதைகள் மூலம் சாந்தி பெற்றுப் போவார்கள் . அவர்கள் எப்பொழுது போவார்கள் வருவா...

அசோகமித்திரன் இருந்த வீதி

  அன்று காலை பெசண்ட் நகர் கடற்கரையில் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, தரமணி வழியாக வேளச்சேரிக்குள் நுழைந்து, அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவில் புகுந்து என் வீட்டை நோக்கி, இரண்டு சக்கர வாகனத்தைத் திருப்பினேன். அசோகமித்திரன் வசித்த வீடு இருக்கும் தெருவின் மறுமுனையில் ஒரு வினோதக் காட்சி. வெள்ளை பெயிண்ட் அடித்த குப்பை ஆட்டோ, சென்னை மாநகராட்சியின் பிரசாரப் பாடலைப் பாடிக் கொண்டே என்னை நோக்கி நகர்ந்து வந்துகொண்டிருக்க, குப்பைக்காரர் வண்டியை பின்னாலிருந்து பதற்றத்துடன் துரத்திவருகிறார். நான் எனது வண்டியை ஓரமாக நிறுத்தி இறங்கி, குப்பை ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையை உற்றுப் பார்த்தேன். முன் கண்ணாடிச் சட்டகத்துக்குப் பின்னால் யாரும் இல்லை. ஓட்டுனரே இல்லாமல் ஓடும் அதிசயத்தைப் பார்த்து வியந்து வெறித்து நின்றிருந்தபோது ஆட்டோ என்னை மிதவேகத்தில் கடந்தது. பக்கவாட்டுப் பார்வையில் வண்டியின் ஓட்டுனர் இருக்கையில், ஒரு குட்டிப்பையன் அமர்ந்து விபரீதம் எதையும் முகத்தில் காண்பிக்காமல் வண்டியை ஓட்டிப் போய்க்கொண்டிருந்தான். அப்போதுதான் நிலைமையின் அபாயம் தெரிந்தது. உடனடியாக கண்ணில் கண்ட பெரிய சிமெண்ட்...

எனது பூனைகள் – சார்லஸ் புக்கோவ்ஸ்கி

  நான் அறிவேன் அவர்களின் வரையறுக்கப்பட்ட தேவைகளை வரையறுக்கப்பட்ட வருத்தங்களை நான் அறிவேன்.   ஆனால் நான் அவர்களைக் கவனிக்கிறேன் அவர்களிடமிருந்து பாடம் படிக்கிறேன். அவர்களுக்குத் தெரிந்த கொஞ்சத்தை நான் விரும்புகிறேன் அதுவே ரொம்ப.   அவர்கள் புகார் சொல்கின்றனர் ஆனால் கவலைப்படுவதில்லை. அவர்களின் மிடுக்கு நடை  ஆச்சரியகரமான கண்ணியம். மனிதர்களால் சற்றும் புரிந்துகொள்ள முடியாதவகையில் எளிமையாக அவர்கள் உறங்குகின்றனர்.   நமது கண்களை விட பூனைகளின் கண்கள்  அபரிதமிதமான அழகு கொண்டவை. அவர்களால் 20 மணிநேரம் ஒரு நாளில் உறங்கமுடியும் எந்தத் தயக்கமும் குற்றவுணர்வும் இன்றி.   நான் சோர்வாக உணரும்போதெல்லாம் எனது பூனைகளைப் பார்ப்பதைத் தவிர வேறெதுவும் செய்வதில்லை. எனது தைரியமெல்லாம் திரும்ப வந்துவிடும்.   நான் அந்த உயிர்களைப் படிக்கிறேன் அவர்களே எனது ஆசிரியர்கள். (சுஜாவுக்கு)

றாம் சந்தோஷ் வடார்க்காடுவின் 'சட்டை வண்ண யானைகள்'

நம்மால் பேச இயலாததை நாம் மௌனத்தில் கடக்கத்தான் வேண்டும் என்கிறான் தத்துவவாதி விட்கன்ஸ்டைன். மொழிக்கு முன்னால் உணரும் விம்மலைப் பேசவும் மொழிபெயர்க்கவும் முயலுகையில் கடக்கப்படும் சிறு எட்டோ, பெருவீச்சின் சாகசமோ தான் கவிதை என்று தோன்றுகிறது. றாம் சந்தோஷ் வடார்க்காடு-வின் மூன்றாவது தொகுப்பான‘சட்டை வண்ண யானைகள்’, தமிழ் நவீன கவிதையில் வேடிக்கை பாவத்தோடு, விழிப்பின் தீவிரத்தையும் கொண்ட காத்திரமான கவிநிகழ்வு. அது கொடுக்கும் அனுபவம் என்னவென்று விசாரிக்கும்போதுதான் விட்கன்ஸ்டைனைத் துணைக்கழைக்க வேண்டி வந்தது. றாம் சந்தோஷ் வடார்க்காடு கவிதையை ஒரு முகமூடியாகப் பாவிக்கிறார். முகம் கொள்ளும் சிரிப்பை, முகம் துடித்து விம்மும் அழுகையை முகமூடிக்கு தனது நடிப்பின் வழியாகப் படிப்படியாக இடம் மாற்றும் கலை அவருடையது. முகமூடிகளே நிகழ்த்துவதாகத் தோன்றவைக்கும் கவிதைகள் என்று இதற்கு முன்னர் பெருந்தேவியின் கவிதைகளைச் சொல்லமுடியும். எமது அந்தரங்கத்தையும் எமது அசிங்கத்தையும் எமது வெறுப்பையும் நாம் உணரும் தனிமையையும் எம் கொந்தளிப்புகளையும் எம் இரட்டை நிலைகளையும் எம் விழிப்பையும் ஒரு முகமூடிக்கு மாற்றிவிட்டால் இயற்கையி...

குத்துவாள் - மிகெயில் லெர்மன்தோவ்

ஆமாம், நான் உன்னை நேசிக்கிறேன் என் நம்பகம் வாய்ந்த குத்துவாளே எனது கூட்டாளி நீ உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்டவன் மனம் முழுக்கப் பழிகொண்ட  கிரிகோரியனால் உருக்கி வார்த்து உருவாக்கப்பட்டவன் காக்கேசியன் ஒருவனால் போருக்காக கூர்மையாக்கப்பட்டவன். தூய்மையான கரமொன்றால்  பிரிவின்போது  நீ எனக்கு அளிக்கப்பட்டாய். நேசத்தின் கடைசி நினைவுப் பரிசு நீ… கசந்து பிரியும்போது  ரத்தம் அல்ல முத்தைப் போன்ற கண்ணீர்  துயரமாக உனது கூர்முனையில்  விழுந்தோடியது.  எஃகாக இருக்கையில் நடுங்கும் தீயில் உன்னை இட்டபோது நீ ஒருகணம் மங்கி பின்னர் சுடர்ந்தொளிர்ந்ததைப் போல  துயரம் தோய்ந்த மர்மக் கனவால் நிறைந்த அவளிரண்டு கருவிழிகளும் எனக்குள்ளேயே நிலைத்துறைந்தன. சாலைகளில் நீ எனக்கு நண்பன் – வார்த்தையற்ற நேசத்தின் நற்கொடை ஒரு பயணிக்கோ – நம்பிக்கை வைக்கக்கூடிய கருவி: நான் ஒருபோதும் மாறப்போவதில்லை என் ஆன்மா  உன்னைப் போல உறுதியான டமாஸ்கஸ் தேனிரும்பால் செய்யப்பட்ட உன்னைப் போல.