Skip to main content

Posts

Showing posts from 2025

சாகித்ய அகாடமி விருதையும் ஆக்கிரமித்த மோடி அரசுக்கு கண்டனம்

  சாகித்ய அகாடமி விருதுகளின் வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில், சென்ற வாரம் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருது நிறுத்திவைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியான நிகழ்வாகும். தமிழில் மட்டுமின்றி இந்தியாவின் 24 மொழிகளிலும் சாகித்ய அகாடமிக்கான விருதுக்குரியவர்களின் பெயர்கள் இறுதிசெய்யப்பட்டு, செயற்குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு டிசம்பர் 18 ஆம் தேதி செய்தியாளர் சந்திப்பு நடத்தி அறிவிக்கப்பட திட்டமிடப்பட்ட நிலையில், இந்த நிறுத்திவைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு செய்துள்ளது.  கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ.க.அரசு நீதித்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி என சுயேச்சையாகச் செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட அத்தனை அமைப்புகளிலும் தலையீடு செய்து, தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அடக்கிவருகிறது.  சாகித்ய அகாடமி என்ற சுதந்திரமான கலாசார அமைப்பின்மீதும் ஒன்றிய பா.ஜ.க  அரசு தனது தாக்குதலை ஆரம்பித்துள்ளதன் வெளிப்பாடு இது.  லலித் கலா அகாடமி, சங்கீத நாடக அகாடமி, சாகித்ய அகாடமி மற்றும் தேசிய நாடகப் பள்ளி தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் வாயிலாக, சாகித்ய அகாட...

பொற்கிழி என்பது அங்கீகாரம் அல்ல; நாம் புறம்தள்ள வேண்டிய பழைய மதிப்பீடு

ஜனநாயக விழுமியங்கள் ஏற்படுவதற்கு முன்னர் முடியாட்சி நடைமுறையில் இருந்த நிலையில் புலவர்கள் பொற்கிழி என்று மன்னரிடம் பெறும் நடைமுறை இருந்தது. நவீன ஜனநாயகம், சமூகநீதி என்றெல்லாம் உருவாகிவிட்ட சமூகத்தில் முத்தமிழறிஞர் கலைஞர்  பொற்கிழி விருதை கவிஞர். சுகுமாரன், ஆதவன் தீட்சண்யா, வ. கீதா போன்ற முற்போக்கான ஆளுமைகள் ஏற்றுக்கொள்வது சரிதானா? இந்த நடைமுறையை நாம் மாற்றுவதற்கு ஏதாவது எதிர்க்குரல் தரவேண்டாமா? எழுத்தாளர்களுக்கு ஒரு அங்கீகாரமே அரிது என்று அதுவே போதுமென்று இருந்துவிடலாகுமா என்ற கேள்வி எனக்கு எழுகிறது. பத்திரிகையாளரும் எனது முன்னாள் நண்பருமான சமஸ், கலைஞர் கருணாநிதி மரணமடைந்த பிறகு நடத்தப்பட்ட பத்திரிகையாளர்கள் நினைவு கருத்தரங்கில் கலைஞர் கருணாநிதியை கருணாநிதி என்று அழைத்தது அந்தக் கூட்ட அரங்கில் சர்ச்சையானது. ஆனால், அதே சமஸ், கலைஞர் கருணாநிதியின், பொற்கிழி விருதை எந்த அசூயையும் இல்லாமல் பெற்றது எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. நாம் சிந்தனைகள் வழியாகவும் கலைகள் வழியாகவும் பழைய நில பிரபுத்துவ மதிப்பீடுகளையும், கலைஞர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நடுவிலான உறவுகளையும் மறுமதிப்பீடு செய்யவேண்ட...

அருந்ததி ராயின் அம்மா

குழந்தைகள் தாங்கள் வந்து விழுந்துவிடும் மண்ணில் நின்று தரிக்கவும், பெரியவர்களாகத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளவும் செய்யும் யுத்தகங்கள்தான் இந்த உலகத்தின் பெரும்பாலான கதைகள். அருந்ததி ராய் தன் அம்மா குறித்து எழுதிய நினைவு நூலைப் படிக்கும்போது அந்த எண்ணம் உறுதிப்பட்டது. பிரிவினைக்கால கலவரங்களில் தொடங்கி இன்றைய பாலஸ்தீனம் வரை, போருக்கே தகவமைத்துக்கொள்ளாத நிராயுதபாணிகளான குழந்தைகள் மீதுதான் பெரும் யுத்தங்கள் தொடர்ந்து ஏவப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதை எதிர்கொண்டு அந்தக் காயங்களுடனும் ஆறாத ரணங்களுடனும் அவர்கள் மிஞ்சி எழுந்து பெரியவர்களாகும் கதையைத்தான் சமீபத்தில் ‘ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்’ என்ற திரைப்படமாகவும் இயக்குனர் பால் தாமஸ் ஆண்டர்சன் எடுத்திருக்கிறார். ஆமாம்; அருந்ததி ராயின் ‘மதர் மேரி கம்ஸ் டூ மீ’ நினைவு நூலை, இரண்டு குழந்தைகள் நடத்திய யுத்தத்தின் கதைகள் என்றும் கொள்ளலாம். முதல் கதை வளர்ந்தும் முரட்டுக் குழந்தையாகவும் முழுமையான அராஜகியாகவும், சர்வாதிகாரியாகவும் இருந்து 89 வயதில் இறந்துபோன மேரி ராயின் கதை. அம்மாவின் கதையூடாகத் தன் கதையைச் சொல்லும் போராளியும் எழுத்துக் கலைஞருமான அருந...

நான் வீழ்வேனென்று நினைத்தாயோ

விழுவதற்காக நியூட்டன் மரத்தின் கிளையை அர்ஜூனனாய் பார்த்துக்கொண்டே இருந்தார். நான் வீழ்வேனென்று நினைத்தாயோ என்று ஆப்பிள் நியூட்டனைப் பார்த்து ஏகடியம் பேசியது. ஒங்கொம்மால என்று பின்பக்கம் படிந்திருந்த புழுதியை உதறிவிட்டுக்கொண்டே எழுந்த நியூட்டன் கீழே கிடந்த கல்லை எடுத்து படாரென்று ஆப்பிளின் காம்பை குறிவைத்துத் தாக்கினார்.

மான்கள்

மரங்கள் கல்லறைத் தூபிகள் இடையிடையே தலையைத் திருப்பி சிலைத்து நிற்கும் மான்கள். (நன்றி: அகழ் இணைய இதழ்)

காடு

அவனுக்கும் அவளுக்கும் இரண்டிரண்டு முள்ளம்பன்றி முட்களை சமப்பரிசாய் கொடுத்தது காடு. வாழ்வு மரணம் அழகு கோரம் அன்பு வெறுப்பு இடையில் நிற்கும் வேலியில் தந்திரங்கள் எதையும் பயிலாத மூன்று நரிகள் அப்போதுதான் விடிந்து உடைந்துகொண்டிருக்கும் வெளிச்சத்தில் கடந்துபோகின்றன. நடந்து கடப்பவர்களுக்குத் கொடும் வலியை தற்காலிகமாகக் கொடுக்கும் கட்டெறும்பின் தலையிலுள்ள நுண்கொடுக்கு மட்டும் எப்போதும் எரிநிலையில். (நன்றி - அகழ் இணைய இதழ்)

ராகுதசை

பாம்பின் உடல் மனிதத் தலை கொண்ட ராகு தசை நடப்பதால் நிலைகொள்ளாத இன்பவாதைகளின் மேடையாக உன் கபாலம் திகழும் என்றான் ஜோதிடன். மணி, மனத்தில் தொடங்கி மனத்தில் வரைந்து முடிக்கும் வாழ்வுதான் உனக்கு என்று சொன்னவள் அம்மா. (நன்றி: அகழ் இணைய இதழ்)

வலிகளுக்கு விடைசொல்லிப் போய்விட்டார் ரமேஷ்

பிரேம், ஷங்கர், ரமேஷ் (புகைப்படம்:குட்டி ரேவதி, 2002) சென்ற நூற்றாண்டின் இறுதி தசாப்தத்தில் அமைப்பியல், பின் நவீனத்துவம் சார்ந்த கோட்பாட்டு எழுத்துகளை அறிமுகப்படுத்தியவர்களே, கூடுதல் பரபரப்போடும் மேட்டிமைத்தனத்தோடும் வன்முறையோடும் தங்கள் எழுத்துகள் வழியாக வெளிப்பட்டுக்கொண்டிருந்த சிறுபத்திரிகை சூழலில் அழுத்தமாக அறிமுகமான பெயர்களில் ஒன்று ரமேஷ்-பிரேம். அ.மார்க்ஸ், ரவிக்குமாரின் எழுத்துகள் நன்றாகத் தொடர்புறுத்துபவை. பூக்கோவையும், ரோலன் பார்த்தையும், ஆஷிஸ் நந்தியையும், காப்ரியேல் கார்சியா மார்க்வெஸையும், பின்னர் ஆங்கிலம் அறிந்தபின்னர் படித்தபோது இவர்கள், அந்த ஆசிரியர்களுக்குச் செய்தது எத்தனை பயங்கரமென்று உணரமுடிந்தது.  ரமேஷ்- பிரேம் இருவரும் சேர்ந்து எழுதிய ‘கிரணம்’ குறுங்காவியம் என்னை முழுமையாக ஈர்த்த படைப்பு. புரிந்தும் புரியாமலும் அச்சத்துடனும் ‘ புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும் ’ நாவலையும், ‘ஆதியிலே மாமிசம் இருந்தது’ நாடகங்களையும் வாசித்திருக்கிறேன். ‘புதைக்கப்பட்ட மனிதர்களும் எழுதப்பட்ட மனிதர்களும்’ நாவலின் அட்டைப்படத்தில் உள்ள தாழியில் வைக்கப்பட்ட சடலத்தின் கோரமான...

மரணத்தைக் கலையாக்கிய காந்தி

ஓவியம்: ஆதிமூலம் ‘காந்தி – அஹிம்சையின் முடிவு’ நூலைப் படித்து முடிக்கும்போது, அசோகமித்திரன் எழுதிய சிறந்த சிறுகதைகளில் ஒன்றான ‘காந்தி’யின் வாக்கியம் கூடுதலாக நம்மை அறைந்து எதிரொலிக்கிறது. ‘உண்மை கசப்பானது’ என்ற வாக்கியமே அது. சத்தியத்தின் கண்ணாடியில் நெருக்கமாகத் தன் சுயத்தை, வாழ்க்கை முழுக்க பிரதிபலித்துப் பார்த்துக்கொண்டேயிருந்த காந்தியும் அவரது சமகாலத்தவருக்கு மட்டுமல்ல இன்றைய தலைமுறையினருக்கும் ஏன் வரலாற்றுக்கும் கூட, விழுங்கிச் செரிக்க இயலாத கசப்பானதொரு வியக்தியென்ற உணர்வை மீண்டும் ஏற்படுத்தும் நூல் இது. இந்திய சுதந்திரத்துக்கு முன்னும் பின்னும் பிரிவினையின்போதும் இனப்படுகொலை என்று சொல்லப்படக்கூடிய அளவில் நடந்த இந்து – முஸ்லிம் மோதல்களைச் சுற்றி காந்தியும், அவரது அஹிம்சையும், அவர் தன் சுயத்துடன் மேற்கொண்ட அசாத்தியமான வீரமும், காந்தியை அவநம்பிக்கையை நோக்கி, துயரத்தை நோக்கி அலைக்கழிப்பை நோக்கி எப்படித் தள்ளியது என்பதைப் பகுப்பாய்வு செய்யும் நூல் இது. 000 இருபதாம் நூற்றாண்டில் உலகளவில் மூன்று இயக்கங்கள் வரலாற்றுப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி வெகுமக்களின் வாழ்க்கை மீதும் தாக்கத்தை ஏ...

முதல் வெளிச்சம்

  தலைமுறை தலைமுறையாய் தொடர்ந்து விரட்டிய பைத்தியமும் பாட்டியால் ரகசியம் காக்கப்பட்ட தாய் தந்தையரின் சாவும் அமானுஷ்யம் பூண்டிருந்த மாளிகையின் அறையில் அடைக்கப்பட்ட மூத்த சகோதரனின் நள்ளிரவு ஓலங்களும் சாமங்களில் விடாது ஒலித்த ஆந்தையின் அலறலும் இடைவெளியின்றி அவன் தலையில் எதிரொலித்துக்கொண்டிருந்தது. குழப்படிகள் மற்றும் நிச்சயமின்மைகளின் கனத்த இருட்டிலிருந்து தர்க்கத்தின் வெளிச்சத்தை, அதன் நிச்சயத் தன்மையைக் கனவுகண்டு சிறுவன் பெட்ரண்ட் ரஸ்ஸல், டிரினிட்டி கல்லூரிக்கு நகர்ந்தான். முதல் காதலி ஆலிஸை 17 வயதில் ரஸ்ஸல் அங்கேதான் சந்தித்தான். வேட்கையின் களங்கமும் காதலின் தூய்மையும் ரஸ்ஸலை புதிதாகப் பிளந்தன. நாகரிகத்தின் பாவனையும், விவேகத்தின் தர்க்கமும் வாலிபன் ரஸ்ஸல் மீது அடுத்த தாக்குதலைத் தொடுத்தன. டிரினிட்டி கல்லூரியின் பரந்த பூங்காவில், ஆளரவமற்ற பிற்பகல் பொழுதொன்றில், ஒரு எலுமிச்சை மரத்துக்குக் கீழே, தனது மார்பகங்களைத் திறந்து முத்தமிட ரஸலுக்கு ஈந்தாள் ஆலிஸ். அதுவரை அனுபவித்த இருட்டெல்லாம் படீர் படீர் என வெடித்தது; ஒருகணம் பெட்ரண்ட் ரஸ்ஸலின் தலைக்கோலம் பளீர் வெளிச்சம் கண்டது. (நன்றி: அகழ் இண...

திங்கள்கிழமை

புகைப்படம் - ஏ.வி.மணிகண்டன் இன்று திங்கள்கிழமை  போகத் தேவையில்லாத அலுவலகம் விடுவிக்கத் தேவையில்லாத படகு.

பிருத்விராஜனும் நான்ஸியும்

குதிரையில் வரமாட்டான் பிருத்விராஜன் பைக்கில்  வந்துகொண்டிருப்பவனுக்காக ஒயிலாய் திரும்பி வளையும் குட்டி நிழல்சாலையின்  முனையில் பூவரச மரத்துக்குக் கீழே பேரமைதியின் எழில் சுமந்து தோள்பையுடன் வாலின் மேல் அமர்ந்து  காத்திருக்கிறாள் நான்ஸி. 

நீல குண்டு பல்பு

பல்துலக்கிகள் தொப்பிகள் குப்பிகளை எல்லாம் பாதுகாத்த மூடிகள் பந்துகள் இறந்தவர் இருப்பவர் பிரிந்தவர் சேர்ந்து வாழ்பவர் தகவல் ஏதும் சொல்லாத  புகைப்படச் சட்டகங்கள் பயன் எல்லாம் முடிந்து ஓய்ந்த  ஆசுவாசம்  அமைதி விச்ராந்தி. இவற்றோடு சேர்ந்து இன்னும் பளபளப்பான கண்ணுடன் உடைந்த பாலத்தின் கழிமுகத்துக்கு வந்து சேர்ந்து மணலில் ஒரு நீல குண்டு பல்ப் அரசனைப் போல வீற்றிருக்கிறது . தொங்கட்டான்களின்  ஒளிச்சிணுங்கல்கள் முனகல்களாய் கீறும் சண்டைகள் கண்ணீர் சுடரும் வெதும்பல்கள் ஆறுதல்கள் மரணத்தை பார்த்திருப்பாய் நீல குண்டு பல்பே. நள்ளிரவில் விழித்து விடாமல் அழுதுகொண்டிருக்கும்  குழந்தையை அரைத்தூக்கத்திலேயே நின்றபடி தொட்டிலில் ஆட்டிய இளம்தாயை நீ மட்டும்தான் விழித்தபடி பார்த்தபடியிருந்தாய் நீல குண்டு பல்பே. 

உள்தெப்பக்குளம் – மேலும் சில காட்சிகள்

யாரோ எறிந்த போதை ஊசி ரத்தக்கறையுடன். ஏதோ ஒரு அவசத்தில் வீசப்பட்ட மல்லிகைச்சரம் தூணோரம். ஆதிப்பச்சையில் வெறித்து நோக்கும் தண்ணீர் நடமாட்டம் இல்லாமல் போய் வெளுத்துக் கிடக்கும் உள்தெப்பக்குளத்தின் கல்படிகள் எந்த ஆடி உற்சவத்திலோ பயன்படுத்திய தேர்வடக் கயிறு பாம்பணையாய் சுருண்டு நைந்துவரும் குளத்தடி இருள்மூலை. உச்சிகால வேளையில் நெல்லையப்பருக்கு அன்னம் உபசரிப்பதற்காக காந்திமதி மேளதாளத்துடன் செல்லும் சந்தடி நெருங்கித் தேய்கிறது. 000 ஊஞ்சல் மண்டபமிருக்கும் நந்தவனத்தில் வான்கோவின் வாதுமை அரும்புகளைப் போல யாரும் பார்க்காமலேயே மஞ்சள் அரளிகள் அரும்பி மொட்டுவிட்டு பூத்து மழையில் நனைந்து உதிர்ந்து மடிகின்றன. 000 உள்தெப்பக்குளத்தின் பச்சைப் பரப்பைப் பார்த்து தளிர்த்ததோ வாழை மரங்களின் இலைகள். வாழை இலைகளின் பசும்பச்சை பார்த்து அரும்பியதோ நந்தவனத்துக் கிளிகளின் இறகுகள். 000 அம்மா மண்டபம் ஆயிரங்கால் மண்டபம் ஊஞ்சல் மண்டபம் சங்கிலி மண்டபம் மகா மண்டபம் நீராழி மண்டபம் வசந்த மண்டபம் 000 வெளிநடை சாத்தும் சத்தம் மண்டபத்தை வந்து அறைகிறது. யுகச்சடவிலிருந்து ஒருகணம் விழித்தெழும் சர்ப்ப யாழி. காலம் சுருண்ட இருட்டுக்...

சங்க கால மரங்கள்

வெள்ளை நிறத்தில் கொத்துக் கொத்தாய் பூ பூத்தது மரா. இறால்களின் தோற்றத்தில் காய்களை விட்டது உகா. (நன்றி: அகழ் இணைய இதழ்)

தக்காளிகள்

தக்காளிகள் தப்பி தரையில் உருள்கின்றன. தக்காளிகள் நழுவி விழுந்துவிடுவது இயல்பாக நடக்கிறது. தக்காளிகள் கைநழுவிப் போய்விடுகின்றன. தக்காளிகள் உருண்டு உருண்டு கண்மறைவாகப் போய்க் கொண்டிருக்கின்றன. நழுவித் தொலைந்துவிடாமல் தக்காளியைப் பிடிக்க தக்காளிக்கு முன்னால் நான் விழுந்து தொலைக்க வேண்டியிருக்கிறது. தக்காளிக்கு தான் விழக்கூடாதென்ற பொறுப்பும் கிடையாது. தக்காளி நீ உடைந்துவிடக் கூடாது. தக்காளி நீ நொறுங்கிவிடக் கூடாது. (நன்றி: அகழ் இணைய இதழ்)

உள்தெப்பக்குளம்

சிறுமிக்கும் குமரிக்கும் இடையிலுள்ள இருட்டில் கண்பதித்திருக்கிறாள் சிற்றுடல் கொண்ட காந்திமதி. அவள் சன்னிதிக்குப் பக்கவாட்டில் வசந்த மண்டபத்தில் ஆளரவமற்ற மத்தியானத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஓர் ஊஞ்சல். கூலக்கடை பஜார் சந்தடியையும் உறிஞ்சிவிடக்கூடிய மதில் சுவருக்கு அப்பால் நிழல் எதையும் பிரதிபலிக்காது அடர்பாசியால் மூடி விலக்கவே இயலாத பச்சைத் தனிமையில் உள்தெப்பக்குளம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அந்தர் தியானம். (நன்றி: அகழ் இணையத்தளம்)

அண்மைக் காட்சி சேய்மைக் காட்சி

  முதல்முறையாக அம்மா அப்பாவுடன் உணவுகத்துக்கு புரோட்டா சாப்பிட வந்த குழந்தை வறுத்த நாட்டுக்கோழிக் கறியை மட்டும் தேர்ந்து புரோட்டாவை அம்மாவின் இலைக்கு வீசி எறிகிறது. இது ஒரு அண்மைக் காட்சி. காஸாவின் அகதிமுகாம்களில் உணவில்லாமல் மண்தின்று இறந்துபோகும் குழந்தைகள், அவர்கள் இறந்ததை ஏற்கமுடியாமல் மார்பில் அடித்து அழும் தாய்மார்கள் என் அலைபேசித் திரையில் தினசரி திரள்கின்றனர். இது ஒரு சேய்மைக் காட்சி. கைவிடப்பட்டோம் என்று முகங்களாலேயே சொல்லும் எத்தனையோ பிராணிகளைக் கடந்துவந்துதான் எனது வளர்ப்புயிர் பிரௌனியுடன் தற்காலிக நிறைவு என்னும் குமிழை தினசரி உருவகித்துக்கொண்டு உறங்கச் செல்கிறேன். இங்கே எல்லோரையும் காப்பாற்றமுடியாமல் போனதால் தான் நாம் யாரையாவது காப்பாற்றிக்கொண்டிருக்கிறோமா? (நன்றி: அகழ் இணைய இதழ்)

மெய்ஞான சபை

உயிர் சந்தடியே இல்லாமல் போன அடையாறு பிரம்மஞான சபை வளாகத்தின் காட்டிலிருந்து கடைசி வண்ணத்துப்பூச்சிக் கூட்டம் பின்தொடர ஜே. கிருஷ்ணமூர்த்தி வெளியேறி பல தசாப்தங்கள் சென்றுவிட்டன. பிரம்ம ஞான சபையின் எல்லையை கட்டியம் கூறிநிற்கும் பனைமரங்கள் கல் மரங்களாக கடலைப் பார்த்து நிச்சலனமாய் வெறித்து நிற்கும் சோகத் தோற்றம். சகோதரன் நித்யாவின் மரணத்துக்குப் பிறகு புத்தகங்கள் அனைத்தும் ஒருகணம் சடலங்களாக சிறுவன் கிருஷ்ணமூர்த்திக்கு தோற்றம் கொடுத்த மறைஞான நூலகத்தின் படிக்கட்டுகள் இப்போது உடைந்து தூர்ந்துவிட்டன. அன்னிபெசண்ட் அம்மையாரே எப்படித் தொலைத்தீர்கள் கிருஷ்ணமூர்த்தியை? அன்னிபெசண்ட் அம்மையாரே ஏன் பிரம்மஞான சபையிலிருந்து கிருஷ்ணமூர்த்தியோடு வெளியேறின வண்ணத்துப்பூச்சிகள்? (நன்றி: அகழ் இணைய இதழ்)

உள்தெப்பக்குளம்

சிறுமிக்கும் குமரிக்கும் இடையிலுள்ள இருட்டில் கண்பதித்திருக்கிறாள் சிற்றுடல் கொண்ட காந்திமதி. அவள் சன்னிதிக்குப் பக்கவாட்டில் வசந்த மண்டபத்தில் ஆளரவமற்ற மத்தியானத்தில் ஆடிக்கொண்டிருக்கும் ஓர் ஊஞ்சல். கூலக்கடை பஜார் சந்தடியையும் உறிஞ்சிவிடக்கூடிய மதில் சுவருக்கு அப்பால் நிழல் எதையும் பிரதிபலிக்காது அடர்பாசியால் மூடி விலக்கவே இயலாத பச்சைத் தனிமையில் உள்தெப்பக்குளம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அந்தர் தியானம். (நன்றி : அகழ் இணையத்தளம்)

நான்ஸி யார்?

என் சமீபத்திய கவிதைகளில் இடம்பெறும் நான்ஸி யாரென்று கேட்டான் நண்பன். வேளச்சேரியின் புராதன பங்களா வீட்டில் தனியாக வசிக்கும் பூனை என்றேன். நான்ஸியைக் கடக்கும் நான்ஸி அழகின் உச்சாடனத்தைத் தாங்கியிருக்கும் பெயர்கள்… அவற்றுக்கு உடல் இல்லை வீடு இல்லை ஊர் இல்லை காணி இல்லை தெரு இல்லை சுற்றுச் சுவர்கள் இல்லை பூட்டு இல்லை சாவிகூட இல்லை வெறும் நிழல்கள் மட்டுமே என்றபடி நான்ஸி வசிப்பதாகச் சொல்லப்படும் வீட்டைத் தாண்டி இருளுக்குள் சென்று மறைந்தது நான்ஸி. 000 (நன்றி: அகழ் இணைய இதழ்)

அனேகத்தின் ருசி - சார்லஸ் சிமிக் கவிதைகள்

உடல் ஓயும் அதே தருணத்தில் மனமும் நிரோத நிலையில் ஓய்ந்துவிடுகிறது. அதனால்தான் அறிஞர் விட்கன்ஸ்டைன், சாவு என்பது வாழ்க்கையோடு தொடர்புடையதே அல்ல என்கிறார் போலும். உடல் உட்கொள்ளும் புரதம் தரும் சக்தியில் எரிவதுதான் மனம். அதனால், கண்ணுக்குத் தூலமாகத் தெரியும் உடல்தான் உபாதைகளுக்கும் தண்டனைகளுக்கும் வலி வறுமை செல்வநிலை இனம் நிறம் மதம் சாதி அதிகாரம் சார்ந்த பாகுபாடுகளுக்கும் உள்ளாகிறது. கண்ணுக்குத் தெரியாத மனம், அதைத் துயரம், சந்தோஷம், குரோதம், விரோதம் என்ற புறாக்கூண்டுகளில் அடுக்கித் தொகுத்துக்கொள்கிறது. உடலுக்கு நேரும் அனுபவங்களை விசாரித்துச் சலித்துத் தொகுத்துக்கொள்ளும் மனத்துக்கு உயர்நிலையை அளித்த ஒரு மரபின் தொடர்ச்சியாக இருந்த புதுக்கவிதையின் ஐம்பது ஆண்டுகாலப் பயணத்தில், உடல்தான் பிரதானம் என்று ஆதாரமாக ஏற்பட்ட பார்வை மாற்றத்தில்தான் அது, நவீன கவிதையாக உருமாறுகிறது. இது எனது ஊகம். முந்தைய நூற்றாண்டுகளில் தாயுமானவர், வள்ளலார், பாரதியார் முதலியோரில் தொடங்கிய போக்கு, புதுக்கவிதையில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமணியம், நகுலன், பசுவய்யா வரை நீண்டது. அத்வைதச் சிந்தனையோடு மோதிமோதி த்வைத உலகைச் சந...