அந்தச் சேவல்
பிஷப்பின் கிரீடத்தை அணிந்திருக்கிறது.
அதன் காலைநேர போதனையை
ஏற்றுக்கொண்டது போல்
தங்கள் தலைகளை அசைத்துக்கொண்டே
கொக்கரித்தபடி
நான்கு கோழிகள் சேவலுக்குப் பின்னால்
அணிவகுத்துச் செல்கின்றன.
புழக்கடை மரத்தின் உச்சியிலுள்ள
பூனையைப் பார்த்து
சைத்தானைப் பார்த்தது போல
குரைக்கும்
கருப்பு - வெள்ளை நாய்கூட
தனக்கான மதத்தைக் கண்டுபிடித்துவிட்டது.
பின்மதியத்தில்
கட்டிலில் படுத்திருக்கும்போதுதான்
தெகார்த்தேவுக்கு தத்துவக் கருத்துகள்
நன்கு உதிக்குமென்று
கேள்விப்பட்டிருக்கிறேன்.
நான் அப்படி அல்ல.
தேவாலயத்துக்குப் போகும்
அண்டைவீட்டாருக்கு
கையசைத்தபடி
குப்பைக்கூளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறேன்.
Comments