இரவு வானில்
கரடியும் சிங்கமும்
தோன்றிவிட்டது.
நெருப்பு விழுங்குபவர்கள்
தீவட்டி வித்தைக்காரர்கள்
பின்னணியில்.
சாதாரண கண்களுக்கு
அவர்கள் செய்யும்
சாகசங்கள்
தெரியவில்லை.
வானியலாளர்களுக்குத்
தெரிகிறது
எங்கள் அண்டைவீட்டு
நாய்க்கும்.
படுக்கையிலிருப்பவர்களிடம்
நள்ளிரவுக்
காட்சி துவங்கிவிட்டதென்று
அது அறிவிக்கிறது.
Comments